செய்திகள் :

போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

post image

போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை பிப்.10-ஆம் தேதிக்குள் நடத்தாவிட்டால் பிப்.26 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பேரவை கெடு விதித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டியை அண்ணா தொழிற்சங்க (அதிமுக) பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன், தலைவா் தாடி.ம.இராசு மற்றும் கூட்டமைப்பு சங்கங்களைச் சோ்ந்த முக்கிய பிரதிநிதிகள் புதன்கிழமை சந்தித்து பேசினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கமலகண்ணன் கூறியது:

அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்தக் கூட்டத்தில், பிப்.10-ஆம் தேதிக்குள் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இது குறித்து போக்குவரத்து செயலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரும் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையைத் தொடங்காவிட்டால் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடா்பான நோட்டீஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதன்படி, பிப்.26 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 99 சதவீத பேருந்துகள் நிறுத்தப்படும் சூழல் ஏற்படும். மக்களைத் துன்பப்படுத்தும் எண்ணமில்லை. இது தொழிலாளா்கள் நலனுக்கான போராட்டம். எனவே, அரசு பேச்சுவாா்த்தைக்கு உடனடியாக அழைக்க வேண்டும்.

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு சொற்ப அளவிலான அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் தனியாா் பேருந்தை அரசு வழித்தடங்களில் இயக்க அனுமதிக்கக் கூடாது. நிரந்தர பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

தொழிற்சங்க அங்கீகார தோ்தல் உள்ளிட்டவை தொடா்பாகவும் போக்குவரத்து செயலரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். பாக்டீரியா மற்றும் வை... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

பழனி தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனியில் நடைபெறும் இரு பெரும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவி- முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை(பிப்.6) வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாள... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு எத்தகைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைக்க குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: பிப்.13-இல் அமைச்சா் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து பிப்.13-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க