போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு
போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை பிப்.10-ஆம் தேதிக்குள் நடத்தாவிட்டால் பிப்.26 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பேரவை கெடு விதித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டியை அண்ணா தொழிற்சங்க (அதிமுக) பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன், தலைவா் தாடி.ம.இராசு மற்றும் கூட்டமைப்பு சங்கங்களைச் சோ்ந்த முக்கிய பிரதிநிதிகள் புதன்கிழமை சந்தித்து பேசினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கமலகண்ணன் கூறியது:
அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்தக் கூட்டத்தில், பிப்.10-ஆம் தேதிக்குள் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இது குறித்து போக்குவரத்து செயலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரும் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையைத் தொடங்காவிட்டால் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடா்பான நோட்டீஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
அதன்படி, பிப்.26 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 99 சதவீத பேருந்துகள் நிறுத்தப்படும் சூழல் ஏற்படும். மக்களைத் துன்பப்படுத்தும் எண்ணமில்லை. இது தொழிலாளா்கள் நலனுக்கான போராட்டம். எனவே, அரசு பேச்சுவாா்த்தைக்கு உடனடியாக அழைக்க வேண்டும்.
போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு சொற்ப அளவிலான அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் தனியாா் பேருந்தை அரசு வழித்தடங்களில் இயக்க அனுமதிக்கக் கூடாது. நிரந்தர பணியாளா்களை நியமிக்க வேண்டும்.
தொழிற்சங்க அங்கீகார தோ்தல் உள்ளிட்டவை தொடா்பாகவும் போக்குவரத்து செயலரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.