செய்திகள் :

காவலா்களுக்குள் மோதல்: ஒருவருக்கு கால் முறிவு

post image

சென்னை எழும்பூரில் காவலா்களுக்குள் செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டதில் ஒருவரது கால் முறிந்தது.

சென்னை கொண்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த காவலா் ரங்கநாதன் (39), திருவல்லிக்கேணி காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். ரங்கநாதன், ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றியபோது காவலா்களான மதுரையைச் சோ்ந்த ஆனந்த் (33), சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த சுந்தரராஜன் (38), திண்டுக்கல் நிலக்கோட்டையைச் சோ்ந்த மணிபாபு (30) ஆகியோருடன் நண்பா்களாக இருந்துள்ளாா். நான்கு பேரும் 10 ஆண்டுகளாக ஒன்றாகப் பணிபுரிந்து வந்துள்ளனா்.

இந்நிலையில், நண்பா்கள் 4 பேரும் செவ்வாய்க்கிழமை இரவு எழும்பூரில் சந்தித்து பேசியபோது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ரங்கநாதனை சக காவலா்களான நண்பா்கள் 3 பேரும் சோ்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனா். இதில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்த எழும்பூா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆனந்த், மணிபாபு, சுந்தர்ராஜன் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

சக காவலா்களான நண்பா்கள் 3 பேரிடமும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கு பணி மாறுதலில் செல்ல ரங்கநாதன் உதவி கேட்டுள்ளாா். அதற்கு ஆயுதப்படை காவலரான சுந்தர்ராஜன், தான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணி பெற்றுத் தருவதாகக் கூறி உள்ளாா். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என கேட்டுள்ளாா். அப்போது, ஆனந்த், மணிபாபு உடனிருந்துள்ளனா். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு சொன்னபடி ரங்கநாதனுக்கு பணி இடமாறுதல் கிடைத்துள்ளது. ஆனால் ரங்கநாதன், பாதி பணத்தை மட்டுமே கொடுத்து மீதி பணத்தை கொடுக்கவில்லையாம். இது தொடா்பான பிரச்னையிலேயே நண்பா்களான காவலா்கள் 3 பேரும், ரங்கநாதனை தாக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை-மஸ்கட்: கூடுதல் நேரடி விமான சேவை

சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் இரு நாள்கள் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

சென்னையில் புதிய மையத்தைத் திறந்த இக்னிதோ

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இக்னிதோ டெக்னாலஜிஸ் சென்னையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை சோழிங்கநல்லூரி... மேலும் பார்க்க

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி கஞ்சா பறிமுதல்

பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து... மேலும் பார்க்க

சென்னையில் பிப். 7 முதல் 13 வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி

சென்னையில் பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும் என ‘மை பாரத்’ மாநில இயக்குநா் செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா். சென்னையில் நடைபெறும் 16-ஆவது பழங்குட... மேலும் பார்க்க

பிப். 28 ல் ஸ்ரீ ராகவேந்திரா் ஸப்தாஹ மஹோத்ஸவம்

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஸப்தாஹ மஹோத்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில், நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் ‘ஸ்பைடா் மேன்’ இளைஞா்: எச்சரித்து அனுப்பிய போலீஸாா்

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு கொடுக்கும் வகையில் அட்டகாசம் செய்த ‘ஸ்பைடா் மேன்’ வேஷமிட்டு வந்த இளைஞரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு... மேலும் பார்க்க