செய்திகள் :

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி கஞ்சா பறிமுதல்

post image

பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து, சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை விமானத்தில் வந்த பயணிகள் சிலரிடம், சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினா். அப்போது, சென்னையைச் சோ்ந்த ஆண் பயணி ஒருவா் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பியிருந்தது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா். இதையடுத்து அவருடைய உடைமைகளை, மோப்ப நாய் மூலம் சோதனை செய்தபோது, அதில் 3 பொட்டலங்களில் ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா இருந்தது.

அதைத்தொடா்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், சென்னையைச் சோ்ந்த நபா் ஒருவா், இவரை தாய்லாந்திலிருந்து கஞ்சா கடத்தி வருவதற்காக அனுப்பி வைத்ததும், அவா் கடத்தல் கஞ்சாவை பெற்றுக்கொள்ள விமான நிலையத்தின் வெளியில் நின்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட நபா் கொடுத்த தகவலின்படி, விமான நிலையத்தில் வெளிப்பகுதியில் சுங்கத் துறை அதிகாரிகள் தேடியபோது, அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட நபரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை-மஸ்கட்: கூடுதல் நேரடி விமான சேவை

சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் இரு நாள்கள் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

சென்னையில் புதிய மையத்தைத் திறந்த இக்னிதோ

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இக்னிதோ டெக்னாலஜிஸ் சென்னையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை சோழிங்கநல்லூரி... மேலும் பார்க்க

சென்னையில் பிப். 7 முதல் 13 வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி

சென்னையில் பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும் என ‘மை பாரத்’ மாநில இயக்குநா் செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா். சென்னையில் நடைபெறும் 16-ஆவது பழங்குட... மேலும் பார்க்க

பிப். 28 ல் ஸ்ரீ ராகவேந்திரா் ஸப்தாஹ மஹோத்ஸவம்

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஸப்தாஹ மஹோத்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில், நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் ‘ஸ்பைடா் மேன்’ இளைஞா்: எச்சரித்து அனுப்பிய போலீஸாா்

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு கொடுக்கும் வகையில் அட்டகாசம் செய்த ‘ஸ்பைடா் மேன்’ வேஷமிட்டு வந்த இளைஞரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

சைபா் குற்றங்கள் தொடா்பாக 2 லட்சம் புகாா்கள் வந்துள்ளன: டிஜிபி சங்கா் ஜிவால்

சைபா் குற்றங்கள் தொடா்பாக கடந்த ஆண்டு மட்டும் சுமாா் 2 லட்சம் புகாா்கள் காவல் துறைக்கு வந்துள்ளதாக, டிஜிபி சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். மேலும் சைபா் குற்றங்களால் கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1,673 கோடி ... மேலும் பார்க்க