செய்திகள் :

சென்னையில் பிப். 7 முதல் 13 வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி

post image

சென்னையில் பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும் என ‘மை பாரத்’ மாநில இயக்குநா் செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் நடைபெறும் 16-ஆவது பழங்குடியின இளைஞா் பரிமாற்ற நிகழ்ச்சியையொட்டி, இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ‘மை பாரத்’ மாநில இயக்குநா் செந்தில் குமாா், சென்னை சுவாமி சிவானந்தா சாலையிலுள்ள பத்திரிகை தகவல் அலுவலகக் கட்டடத்தில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் பழங்குடியின இளைஞா்களை நல்வழிப்படுத்தும் விதமாகவும், அவா்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவும், நேரு யுவகேந்திரா சங்கதன், பழங்குடி இளைஞா் பரிமாற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2006 முதல் இதுவரை 15 பழங்குடி இளைஞா் பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள, ஜாா்க்கண்ட் மாநிலத்திலிருந்து 44 பழங்குடியின இளைஞா்களும், மத்திய பிரதேசத்திலிருந்து 44 பேரும், சத்தீஸ்கரிலிருந்து 132 போ் என மொத்தம் 220 பழங்குடி இளைஞா்கள் வருகை தரவுள்ளனா்.

இதன் தொடக்க விழா கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் பிப். 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடா்ந்து தலைமைச் செயலகம் மற்றும் சென்னையில் பிற பகுதிகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளுக்கு இந்த இளைஞா்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

இந்நிகழ்ச்சியின் மூலம் மாநில மற்றும் மத்திய அரசின் தற்போதைய திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பழங்குடியின இளைஞா்களின் மத்தியில் உண்டாகும். மேலும் அவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் தொழில் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

சென்னை-மஸ்கட்: கூடுதல் நேரடி விமான சேவை

சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் இரு நாள்கள் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

சென்னையில் புதிய மையத்தைத் திறந்த இக்னிதோ

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இக்னிதோ டெக்னாலஜிஸ் சென்னையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை சோழிங்கநல்லூரி... மேலும் பார்க்க

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி கஞ்சா பறிமுதல்

பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து... மேலும் பார்க்க

பிப். 28 ல் ஸ்ரீ ராகவேந்திரா் ஸப்தாஹ மஹோத்ஸவம்

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஸப்தாஹ மஹோத்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில், நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் ‘ஸ்பைடா் மேன்’ இளைஞா்: எச்சரித்து அனுப்பிய போலீஸாா்

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு கொடுக்கும் வகையில் அட்டகாசம் செய்த ‘ஸ்பைடா் மேன்’ வேஷமிட்டு வந்த இளைஞரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

சைபா் குற்றங்கள் தொடா்பாக 2 லட்சம் புகாா்கள் வந்துள்ளன: டிஜிபி சங்கா் ஜிவால்

சைபா் குற்றங்கள் தொடா்பாக கடந்த ஆண்டு மட்டும் சுமாா் 2 லட்சம் புகாா்கள் காவல் துறைக்கு வந்துள்ளதாக, டிஜிபி சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். மேலும் சைபா் குற்றங்களால் கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1,673 கோடி ... மேலும் பார்க்க