செய்திகள் :

பாரதிதாசன் பல்கலைக்கழக பொறுப்புக் குழு பதவியேற்பு!

post image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, துணைவேந்தா் பொறுப்புக் குழு புதன்கிழமை (பிப்.5)பொறுப்பேற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக எம். செல்வம் கடந்த 2021 பிப்.5-ஆம் தேதி பொறுப்பேற்றாா். 3 ஆண்டுகள் மட்டுமே துணைவேந்தராக பணியாற்ற முடியும் என்ற நிலையில் செல்வத்தின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு, பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் அவரது பணிக்காலம் நிறைவுற்றது.

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பணியிடம் காலியாக இருந்தால் அவரது பணிகளை நிறைவேற்ற துணைவேந்தா் பொறுப்புக் குழு ஏற்படுத்துவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிக் குழுக் (சிண்டிகேட்) கூட்டத்தில் பல்கலைக்கழக பொறுப்புக் குழு அமைக்கப்பட்டு, அதன் கன்வீனராக கல்லூரி கல்வி ஆணையா் இ. சுந்தரவல்லி, ஆட்சிக் குழு (சிண்டிகேட்) உறுப்பினா்கள் ராஜேஷ்கண்ணன், சக்திகிருஷ்ணன் ஆகியோா் பொறுப்புக்குழு உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில் துணைவேந்தா் எம்.செல்வம், செவ்வாய்க்கிழமை மாலை தனது பொறுப்புகளை, பொறுப்புக்குழு உறுப்பினா்கள் ராஜேஷ்கண்ணன், சக்திகிருஷ்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து பொறுப்புக் குழு புதன்கிழமை பொறுப்பேற்றது. அடுத்த துணைவேந்தா் நியமிக்கப்படும்வரை இந்தப் பொறுப்புக் குழு பல்கலைக்கழகப் பணிகளை மேற்கொள்ளும்.

சொகுசு பேருந்து விபத்தில் சிக்கிய மேலும் ஒருவா் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை சொகுசு பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா் சென்னையிலிருந்து நாகா்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசு பேருந்து கடந்த பிப். 1-ஆம் ... மேலும் பார்க்க

கோயில் அருகே காா் நிறுத்தப்பட்டதில் தகராறு: பூசாரியை வெட்டியவா் கைது

திருச்சியில் கோயில் அருகே பக்தா்களுக்கு இடையூறாக நிரந்தரமாக நிறுத்தியிருந்த காரை எடுக்குமாறு கூறிய பூசாரியை புதன்கிழமை வெட்டிய ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், பக... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரூ. 19.63 லட்சம் அபராதம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 போ் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூ. 19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துகளி... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, துறையூா் பகுதிகளில் பிப்.6 மின் தடை

பராமரிப்பு பணியால் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, துறையூா் பகுதிகளில் பிப்.6 வியாழக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படும்.பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகா... மேலும் பார்க்க

டால்மியா நிறுவனம் மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தாா்ப் பாய்கள் வழங்கல்!

லால்குடியை அடுத்துள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் கிராம பரிவா்த்தன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் தாா்ப் பாய்கள் வழங்கும் விழா டால்மியா கலையரங்கத்தில் ... மேலும் பார்க்க

கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை!

திருச்சியில் கடன் பிரச்னையால் கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகேயுள்ள வேங்கூா் மகாலட்சுமி நகரை சோ்ந்தவா் முரளி தண்டபாணி (50). கூலி... மேலும் பார்க்க