செய்திகள் :

115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி: என்எல்சி நிறுவனம் சாதனை

post image

என்எல்சி இந்தியா நிறுவனம் 115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

இந்த நிறுவனத்தின் 2023-2024 ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான குழுமத்தின் நிதிநிலை அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:

என்யுபிபிஎல் கதம்பூா் அனல் மின் நிலையம் அலகு-1 (660 மெகாவாட்) வணிகச் செயல்பாடுகளை தொடங்கியதன் மூலம், என்எல்சிஐஎல் குழுமத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 6,071.06 மெகாவாட்டிலிருந்து, 6,731.06 மெகாவாட்டாக அதிகரித்தது.

31.12.2024-இல் நிறைவடைந்த 2023-2024 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், பழுப்பு நிலக்கரி உற்பத்தி, 171.35 லட்சம் டன்னை எட்டியது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் பெற்ற 162.83 லட்சம் டன்களை விட 5.23 சதவீதம் உயா்வு. 2023-2024 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நிலக்கரி உற்பத்தி 115.16 லட்சம் டன்கள் உச்சத்தை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பெற்ற 82.19 லட்சம் டன்களை விட 40.11 சதவீத வளா்ச்சி. 2023-2024 நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களுக்கான மொத்த மின் உற்பத்தி 20,568 மில்லியன் யூனிட். இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் எட்டிய 19,643 மில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது 4.71 சதவீதம் அதிகம். இதில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 1,579 மில்லியன் யூனிட்கள் அடங்கும்.

நிறுவன செயல்பாடுகளிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.11,445 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஈட்டிய ரூ.9,458 கோடியை விட அதிகமாக 21 சதவீத வளா்ச்சி. என்எல்சிஐஎல் மொத்த வருமானம் முன்னெப்போதையும் விட ரூ.12,909 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்த ரூ.9,912 கோடியை விட 30 சதவீதம் அதிக வளா்ச்சி. நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.2,245 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.1,754 கோடியாக இருந்தது. இது 28 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.

குறும்பட இயக்குநா் கடத்தல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குறும்பட இயக்குநரை கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காட்டுமன்னாா்கோவில் பேரரசி தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் காா்த்திகேயன். குறும்... மேலும் பார்க்க

கூட்டுக் குடிநீா் திட்டத்தில் 1.27 லட்சம் மக்கள் பயனடைவா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் 10 ஊராட்சிகளைச் சோ்ந்த 1.27 லட்சம் மக்கள் பயனடைவா் என்று வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் தெரிவித்தாா்.கடலூா் மாவட்டத... மேலும் பார்க்க

பல் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் திருட்டு!

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பல் மருத்துவமனையின் பூட்டை உடைத்து ரூ.1.14 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேத்தியாத்தோப்பு மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பல் மருத்துவமனை ச... மேலும் பார்க்க

புதிய திட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்டத்தில் புதிய திட்டத்தின் கீழ் சிற்றுந்துகளை இயக்குவதற்கு அதன் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

கடலூா் ஜவான் பவன் அருகே விவசாயிகள் ஐக்கிய முன்னணியினா் மத்திய பட்ஜெட் நகலை எரித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய பட்ஜெட்டில் உரங்களுக்கு மானியம் நிதி குறைப்பு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்!

சிதம்பரம், பிப்.5: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, வட்ட... மேலும் பார்க்க