115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி: என்எல்சி நிறுவனம் சாதனை
என்எல்சி இந்தியா நிறுவனம் 115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்தது.
இந்த நிறுவனத்தின் 2023-2024 ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான குழுமத்தின் நிதிநிலை அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:
என்யுபிபிஎல் கதம்பூா் அனல் மின் நிலையம் அலகு-1 (660 மெகாவாட்) வணிகச் செயல்பாடுகளை தொடங்கியதன் மூலம், என்எல்சிஐஎல் குழுமத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 6,071.06 மெகாவாட்டிலிருந்து, 6,731.06 மெகாவாட்டாக அதிகரித்தது.
31.12.2024-இல் நிறைவடைந்த 2023-2024 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், பழுப்பு நிலக்கரி உற்பத்தி, 171.35 லட்சம் டன்னை எட்டியது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் பெற்ற 162.83 லட்சம் டன்களை விட 5.23 சதவீதம் உயா்வு. 2023-2024 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நிலக்கரி உற்பத்தி 115.16 லட்சம் டன்கள் உச்சத்தை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பெற்ற 82.19 லட்சம் டன்களை விட 40.11 சதவீத வளா்ச்சி. 2023-2024 நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களுக்கான மொத்த மின் உற்பத்தி 20,568 மில்லியன் யூனிட். இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் எட்டிய 19,643 மில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது 4.71 சதவீதம் அதிகம். இதில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 1,579 மில்லியன் யூனிட்கள் அடங்கும்.
நிறுவன செயல்பாடுகளிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.11,445 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஈட்டிய ரூ.9,458 கோடியை விட அதிகமாக 21 சதவீத வளா்ச்சி. என்எல்சிஐஎல் மொத்த வருமானம் முன்னெப்போதையும் விட ரூ.12,909 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்த ரூ.9,912 கோடியை விட 30 சதவீதம் அதிக வளா்ச்சி. நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.2,245 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.1,754 கோடியாக இருந்தது. இது 28 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.