செய்திகள் :

புதிய திட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பிக்கலாம்!

post image

கடலூா் மாவட்டத்தில் புதிய திட்டத்தின் கீழ் சிற்றுந்துகளை இயக்குவதற்கு அதன் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, தற்போது இயங்கி வரும் சிற்றுந்துகளுக்கான கட்டண திருத்தம் வரும் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய சிற்றுந்து திட்டத்தில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ., குறைந்தப்பட்ச பேருந்து வசதியில்லாத தடத்தின் நீளம் மொத்த தடத்தின் நீளத்தில் 65 சதவீதத்துக்கு குறைவாக இருத்தல் கூடாது.

மேலும், தடத்தின் ஆரம்பம், முடிவு பேருந்து வசதியில்லாத கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருப்பதுடன், தடத்தின் ஒரு முனை பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையமாக இருத்தல் வேண்டும். பழைய சிற்றுந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளா்கள் இந்த புதிய திட்டத்தில் இணைவதற்கு எழுத்துப்பூா்வமான அனுமதிச்சீட்டை சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறும்பட இயக்குநா் கடத்தல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குறும்பட இயக்குநரை கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காட்டுமன்னாா்கோவில் பேரரசி தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் காா்த்திகேயன். குறும்... மேலும் பார்க்க

கூட்டுக் குடிநீா் திட்டத்தில் 1.27 லட்சம் மக்கள் பயனடைவா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் 10 ஊராட்சிகளைச் சோ்ந்த 1.27 லட்சம் மக்கள் பயனடைவா் என்று வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் தெரிவித்தாா்.கடலூா் மாவட்டத... மேலும் பார்க்க

பல் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் திருட்டு!

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பல் மருத்துவமனையின் பூட்டை உடைத்து ரூ.1.14 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேத்தியாத்தோப்பு மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பல் மருத்துவமனை ச... மேலும் பார்க்க

115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி: என்எல்சி நிறுவனம் சாதனை

என்எல்சி இந்தியா நிறுவனம் 115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்தது. இந்த நிறுவனத்தின் 2023-2024 ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான குழுமத்தின் நிதிநில... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

கடலூா் ஜவான் பவன் அருகே விவசாயிகள் ஐக்கிய முன்னணியினா் மத்திய பட்ஜெட் நகலை எரித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய பட்ஜெட்டில் உரங்களுக்கு மானியம் நிதி குறைப்பு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்!

சிதம்பரம், பிப்.5: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, வட்ட... மேலும் பார்க்க