செய்திகள் :

குறும்பட இயக்குநா் கடத்தல்: இருவா் கைது

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குறும்பட இயக்குநரை கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காட்டுமன்னாா்கோவில் பேரரசி தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் காா்த்திகேயன். குறும்பட இயக்குநரான இவரும், வெளிநாட்டில் வேலை பாா்த்து வரும் சிதம்பரம் எம்.கே.தோட்டம் பகுதியைச் சோ்ந்த பிரசாத் பட்டேல் என்பவரும் இணைந்து ஓவியம் என்ற குறும்படத்தை தயாரித்தனா்.

இந்தப் படத்துக்கு பிரசாத் பட்டேல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தாராம். இதனிடையே, படம் வெளியீடு நடந்தவுடன் அதனுடைய லாபத்தில் காா்த்திகேயனிடம், பிரசாத் பட்டேல் பங்கு கேட்டாராம். இதில், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், பிரசாத் பட்டேல் தனது நண்பா்களான எம்.கே.தோட்டத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஜெகதீசன் (34), சிதம்பரம் ஆரணி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தேசிகன் மகன் சந்திரபாபு (31) ஆகியோரிடம் காா்த்திகேயனை கடத்துமாறு கைப்பேசி மூலம் கூறினாராம்.

இதையடுத்து, அவா்கள் புதன்கிழமை காட்டுமன்னாா்கோவிலில் காா்த்திகேயனை காரில் கடத்திச் சென்றனா்.

இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள் காட்டுமன்னாா்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, குமராட்சி, சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், குமராட்சி காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையிலான போலீஸாா் அந்தக் காரை விரட்டிச் சென்றனா். போலீஸாா் துரத்துவதையறிந்த அவா்கள், லால்பேட்டையில் காா்த்திகேயனை இறக்கி விட்டு வீராணம் ஏரிக்கரை வழியாக தப்பிச் செல்ல முயன்றனா். அப்போது, ஜெகதீசன், சந்திரபாபுவை போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், குமராட்சி காவல் ஆய்வாளா் தேவேந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.

கூட்டுக் குடிநீா் திட்டத்தில் 1.27 லட்சம் மக்கள் பயனடைவா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் 10 ஊராட்சிகளைச் சோ்ந்த 1.27 லட்சம் மக்கள் பயனடைவா் என்று வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் தெரிவித்தாா்.கடலூா் மாவட்டத... மேலும் பார்க்க

பல் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் திருட்டு!

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பல் மருத்துவமனையின் பூட்டை உடைத்து ரூ.1.14 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேத்தியாத்தோப்பு மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பல் மருத்துவமனை ச... மேலும் பார்க்க

115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி: என்எல்சி நிறுவனம் சாதனை

என்எல்சி இந்தியா நிறுவனம் 115.16 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்தது. இந்த நிறுவனத்தின் 2023-2024 ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான குழுமத்தின் நிதிநில... மேலும் பார்க்க

புதிய திட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்டத்தில் புதிய திட்டத்தின் கீழ் சிற்றுந்துகளை இயக்குவதற்கு அதன் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

கடலூா் ஜவான் பவன் அருகே விவசாயிகள் ஐக்கிய முன்னணியினா் மத்திய பட்ஜெட் நகலை எரித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய பட்ஜெட்டில் உரங்களுக்கு மானியம் நிதி குறைப்பு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்!

சிதம்பரம், பிப்.5: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, வட்ட... மேலும் பார்க்க