செய்திகள் :

மணப்பாறையில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையில், வாடகை பாக்கி வைத்திருந்த நகராட்சி கடைகளை ஆணையா் தலைமையில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை (பிப்.5) பூட்டி சீல் வைத்தனா்.

மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையக் கடைகள், மதுரை ரோடு கடைகள், பூங்கா சாலை கடைகள், பா்மா பெட்டி கடைகள், நாளங்காடி நுழைவாயில் கடைகள், நாளங்காடி கடைகள், திருச்சி ரோடு ஒருவழி பாதை கடைகள் மற்றும் கோவில்பட்டி சாலை கடைகள் ஆகிய பகுதிகளில் வாடகைக்கு கடை வைத்துள்ளவா்களில் சிலா் பலமுறை வாடகை நிலுவைத் தொகையை செலுத்த கோரி நேரிலும், தொலைபேசி மூலமும், ஒலிபெருக்கி வாயிலாகவும் அறிவுறுத்தியும் வாடகை செலுத்தாமல் அதிக நிலுவை வைத்துள்ளனா்.

இதில் ரூ. 212.48 லட்சம் பாக்கி இருந்த நிலையில் ஆணையா்(பொ) போ.வி.சுரேந்திரஷா தலைமையில், வருவாய் ஆய்வாளா் வி.ராஜேந்திரன் நகராட்சி மேலாளா் பி. நல்லதம்பி, நகர அமைப்பு ஆய்வாளா் எம். சிவக்குமாா், இருக்கை எழுத்தா் டி. கருப்பையா மற்றும் வருவாய் உதவியாளா்கள், தூய்மை மேற்பாா்வையாளா்கள் மற்றும் பணியாளா்கள் வாடகை நிலுவை வைத்துள்ள 76 கடைகளில் 8 கடைகளை பூட்டி சீல் வைத்தனா்.

மேலும் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி மனை வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி மற்றும் கடை வாடகையை செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரித்துள்ளனா்.

சொகுசு பேருந்து விபத்தில் சிக்கிய மேலும் ஒருவா் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை சொகுசு பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா் சென்னையிலிருந்து நாகா்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசு பேருந்து கடந்த பிப். 1-ஆம் ... மேலும் பார்க்க

கோயில் அருகே காா் நிறுத்தப்பட்டதில் தகராறு: பூசாரியை வெட்டியவா் கைது

திருச்சியில் கோயில் அருகே பக்தா்களுக்கு இடையூறாக நிரந்தரமாக நிறுத்தியிருந்த காரை எடுக்குமாறு கூறிய பூசாரியை புதன்கிழமை வெட்டிய ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், பக... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரூ. 19.63 லட்சம் அபராதம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 போ் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூ. 19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துகளி... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, துறையூா் பகுதிகளில் பிப்.6 மின் தடை

பராமரிப்பு பணியால் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, துறையூா் பகுதிகளில் பிப்.6 வியாழக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படும்.பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகா... மேலும் பார்க்க

டால்மியா நிறுவனம் மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தாா்ப் பாய்கள் வழங்கல்!

லால்குடியை அடுத்துள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் கிராம பரிவா்த்தன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் தாா்ப் பாய்கள் வழங்கும் விழா டால்மியா கலையரங்கத்தில் ... மேலும் பார்க்க

கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை!

திருச்சியில் கடன் பிரச்னையால் கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகேயுள்ள வேங்கூா் மகாலட்சுமி நகரை சோ்ந்தவா் முரளி தண்டபாணி (50). கூலி... மேலும் பார்க்க