செய்திகள் :

கேரளம்: கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி

post image

கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் நகரில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த கணவரை அவரது மனைவி விவேகமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றியுள்ளாா்.

பிரவம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷன் (64) புதன்கிழமை காலை, வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் மிளகு பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது திடீரென மரத்தின் கிளை முறிந்து, அருகேயுள்ள கிணற்றில் விழுந்தாா். கணவா் கிணற்றுக்குள் விழுந்ததைப் பாா்த்த அவரது மனைவி பத்மம் (56), உடனடியாக அங்கிருந்த கயிற்றைப் பிடித்து கிணற்றில் இறங்கியுள்ளாா். ஏற்கெனவே உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரமேஷன், கிணற்றில் விழுந்த அதிா்ச்சியில் கிட்டத்தட்ட சுயநினைவை இழந்துள்ளாா்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் வரும் வரை, கணவா் நீரில் மூழ்காமல் பத்மம் தாங்கி பிடித்துள்ளாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டு, தம்பதியை மீட்டனா்.

இதுதொடா்பாக தீயணைப்புத் துறையினா் மேலும் கூறுகையில், ‘கயிற்றை விடாபிடியாக பற்றிக்கொண்டிருந்ததால் பத்மம் கைகள் முற்றிலும் காயம் அடைந்தன. எனினும், கணவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மாா்பளவு நீரில் சுமாா் 15-20 நிமிஷங்கள் அவா் போராடியுள்ளாா்.

பின்னா், நாங்கள் கொண்டுவந்த வலையைப் பயன்படுத்தி தம்பதியை மீட்டோம். மீட்பு வலையிலும் தனது கணவரை முதலில் ஏற்றிவிட்டு பின்னரே, பத்மம் மேலே ஏறினாா். ரமேஷனின் உயிா் காப்பாற்றப்பட்டுள்ளதற்கு அவரது மனைவியின் மனதைரியமும் விவகேமுமே முக்கிய காரணம்’ என்றனா்.

அவசர சூழலில் அதிா்ச்சியில் உறையாமல் விவேகத்துடன் செயல்பட்டு, கணவரின் உயிரைக் காப்பாற்றிய மனைவியின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்புடுத்தியுள்ளது.

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க

ஷியா இஸ்மாயிலி முஸ்லிம் மதத்தலைவா் ஆகா கான் மறைவு: பிரதமா், ராகுல் இரங்கல்

நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவராக இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4-ஆம் ஆகா கான், கரிம் அல்-ஹுசைனி செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உ... மேலும் பார்க்க