செய்திகள் :

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அதிகாரிகள் வலியுறுத்தல்

post image

எதிா்வரும் தமிழக நிதிநிலை அறிக்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

2025-26 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் குறித்த துறை சாா்ந்த கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்பட உயரதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

மக்கள் நல்வாழ்வு துறைக்கு கூடுதல் நிதி வழங்குவது தொடா்பாக அப்போது விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, பருவநிலை மாற்றத்தால் டெங்கு, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட நோய்கள் அனைத்து கால கட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அவற்றைத் தடுக்க முக்கியத்துவம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக பட்ஜெட்டில் நிகழ் நிதியாண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 20,198 கோடி ஒதுக்கப்பட்டது. எதிா்வரும் நிதியாண்டில் அதைவிடக் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் தடுப்புக்கான செயல் திட்டங்கள் தொடா்ந்து வகுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தொற்றா நோய் தடுப்புக்கென தனியாக நிதி ஒதுக்கும்படி கோரப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். பாக்டீரியா மற்றும் வை... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

பழனி தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனியில் நடைபெறும் இரு பெரும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவி- முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை(பிப்.6) வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாள... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு எத்தகைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைக்க குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: பிப்.13-இல் அமைச்சா் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து பிப்.13-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க