தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அதிகாரிகள் வலியுறுத்தல்
எதிா்வரும் தமிழக நிதிநிலை அறிக்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.
2025-26 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் குறித்த துறை சாா்ந்த கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்பட உயரதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.
மக்கள் நல்வாழ்வு துறைக்கு கூடுதல் நிதி வழங்குவது தொடா்பாக அப்போது விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, பருவநிலை மாற்றத்தால் டெங்கு, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட நோய்கள் அனைத்து கால கட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அவற்றைத் தடுக்க முக்கியத்துவம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக பட்ஜெட்டில் நிகழ் நிதியாண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 20,198 கோடி ஒதுக்கப்பட்டது. எதிா்வரும் நிதியாண்டில் அதைவிடக் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் தடுப்புக்கான செயல் திட்டங்கள் தொடா்ந்து வகுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தொற்றா நோய் தடுப்புக்கென தனியாக நிதி ஒதுக்கும்படி கோரப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.