செய்திகள் :

அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

post image

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், தலைநகர் புது தில்லியில் இந்த விமானம் தரையிறங்காமல் அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று ஆம் ஆத்மி தலைவர் ஆமன் அரோரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த விமானத்தில் இருக்கும்போது, ஏன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், விமானம் தரையிறங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கேட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை, மத்திய அரசு எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்க ராணுவ விமானத்தை தலைநகர் தில்லியில் தரையிறக்கியிருக்கலாம். ஆனால், அதனை விடுத்து அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பது எண்ணற்றக் கேள்விகளை எழுப்புகிறது என்று கூறியிருக்கிறார்.

இதுபோல, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், இந்த விமானம் பஞ்சாபில் தரையிறக்கப்பட்டதால், பஞ்சாப் மக்களே அதிகம் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பது போன்ற தோற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்த முயல்வாதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம் தலைநகர் தில்லியில் தரையிறக்கப்பட்டால், மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும்: அமித் ஷா

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (பிப். 5) தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு குறித்து தில்லி... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை ரூ.17 லட்சம் கையாடல்: பெண் காவலர் பணி இடைநீக்கம்

பனாஜி : கோவா காவல் துறையில் தலைமைக் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடருந்து வசூலிக்கப்பட்ட ரூ.17 லட்சம் பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக பணியிலி... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி மாறுகிறதா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் பார்க்க

இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!

இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது அவர்கள் விரும்பினால் அரசின் பிற துறைகளில் பணி புரிய தேவஸ்தானம் தனத... மேலும் பார்க்க

தில்லியில் வாக்குப்பதிவு நிறைவு!

தலைநகர் தில்லியில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.காலை மந்தமாக நடைபெற்றுவந்த வாக்குப் பதிவு, பிற்பகலில் அதிகரிக்கத் தொடங்கியதால், வாக்கு வி... மேலும் பார்க்க

பயனாளிகளின் உண்மைத் தன்மை: எண்ணெய் நிறுவனங்களுக்கு காலக்கெடு

எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு உருளை பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மையை பயோ-மெட்ரிக் முறையில் உறுதி செய்வதற்கான பணியை மார்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.எண்ணெய் நிறுவனங்கள், எரி... மேலும் பார்க்க