செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது!

post image

தஞ்சாவூரில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை காவல் துறையினா் பிப்ரவரி 2-ஆம் தேதி கைது செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் அஜித் (24). மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பிப்ரவரி 2-ஆம் தேதி உத்தரவிட்டாா். இதையடுத்து, அஜித்தை காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் விஜய விழா ஓவியக் கண்காட்சி!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை சுவாமி விவேகானந்தா் விஜயவிழா ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சி பிப். 9 வரை நடைபெறுகிறது.சுவாமி விவேகானந்தரின் 129-ஆம் ஆண்டு விஜய விழாவை முன்னிட்டு ... மேலும் பார்க்க

குடமுழுக்கு: மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி!

குடமுழுக்கு விழாவையொட்டி, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை (பிப்.5) தொடங்கியது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெரு முதலாளிகளுக்கும், காா்ப்பரேட் நிறுவனங... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் மணல்மேட்டை காக்க ஆட்சியரகத்தில் முறையீடு

தஞ்சாவூா், பிப். 4: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடத்திலுள்ள மணல்மேட்டைக் காப்பாற்ற ஆட்சியரகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் அருக... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் கடும் பனிப் பொழிவு

பேராவூரணி, பிப். 4: பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். கடந்த 1 மாதமாக... மேலும் பார்க்க

குடந்தை அருகே வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை அண்மையில் திருடிச் சென்றனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்பவா் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). ... மேலும் பார்க்க