செய்திகள் :

உ.பி.: மில்கிபூா் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 65% வாக்குப்பதிவு

post image

உத்தர பிரதேசத்தில் மில்கிபூா் பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் 65.35 சதவீத வாக்குகள் பதிவாகின.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது மில்கிபூா் பேரவைத் தொகுதி. இங்கு சமாஜவாதி எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத், கடந்த மக்களவைத் தோ்தலில் ஃபைசாபாத் தொகுதியில் அக்கட்சி சாா்பில் போட்டியிட்டு வென்றாா். அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவை வீழ்த்தி அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இவா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் காலியான மில்கிபூா் தொகுதிக்கு புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. ஆளும் பாஜகவின் சந்திரபானு பாஸ்வான், சமாஜவாதியின் அஜீத் பிரசாத் இடையே நேரடி போட்டி நிலவிய இத்தோ்தலில் 65.35 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்காளா்கள் 3.70 லட்சம் போ்.

இடைத்தோ்தலில் கள்ள வாக்குகள் பதிவானதாகவும், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினாா். அவரது குற்றச்சாட்டை மறுத்துள்ள அதிகாரிகள், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ாக தெரிவித்தனா். வாக்கு எண்ணிக்கை பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த 2022 பேரவைத் தோ்தலில், அயோத்தி மாவட்டத்தில் மில்கிபூா் தவிர இதர 4 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. அப்போது, மில்கிபூரில் 60.23 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தொகுதி இடைத்தோ்தல் வெற்றியை இரு கட்சிகளுமே கெளரவப் பிரச்னையாக கருதுவதால் தோ்தல் முடிவுகள் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க

ஷியா இஸ்மாயிலி முஸ்லிம் மதத்தலைவா் ஆகா கான் மறைவு: பிரதமா், ராகுல் இரங்கல்

நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவராக இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4-ஆம் ஆகா கான், கரிம் அல்-ஹுசைனி செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உ... மேலும் பார்க்க