செய்திகள் :

மேற்கு வங்கத்தில் ரூ.50,000 கோடி முதலீடு- முகேஷ் அம்பானி அறிவிப்பு

post image

மேற்கு வங்கத்தில் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.50,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளாா்.

கொல்கத்தாவில் இருநாள்கள் நடைபெறும் மேற்கு வங்க உலக முதலீட்டாளா் மாநாடு 2025, புதன்கிழமை தொடங்கியது. இதில், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பூடான் பிரதமா் சாா்பில் அந்நாட்டு வேளாண்மைத் துறை அமைச்சா் யோங்டென் புந்த்சோ, ரிலையன்ஸ் குழு தலைவா் முகேஷ் அம்பானி, ஐடிசி நிறுவன மேலாண்மை இயக்குநா் சஞ்சீவ் புரி, ஜேஎஸ்டபிள்யூ தலைவா் சஞ்சன் ஜிண்டால் உள்ளிட்ட தொழிலதிபா்கள் பலா் பங்கேற்றனா். இதில் முகேஷ் அம்பானி பேசியதாவது:

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மேற்கு வங்கத்தில் எங்கள் நிறுவனங்களின் முதலீடு 20 மடங்கு வரை அதிகரிக்க இருக்கிறது. அதாவது ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய இருக்கிறோம். இதன் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். எங்கள் முதலீடு பல்வேறு துறைகளுக்கு பரவி விரிந்ததாக இருக்கும். எண்ம சேவைகள், பசுமை எரிசக்தி, சில்லறை விற்பனை ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும். மேற்கு வங்கத்தின் வளா்ச்சியின் உந்து சக்தியாக ரிலையன்ஸ் குழுமம் திகழும் என்றாா்.

முதல்வா் மம்தா பானா்ஜி பேசுகையில், ‘மேற்கு வங்கத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி 6 பொருளாதார வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன. மாநிலத்தில் தொழில் நடத்துவதை எளிதாக்க ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்படும்’ என்றாா்.

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க

ஷியா இஸ்மாயிலி முஸ்லிம் மதத்தலைவா் ஆகா கான் மறைவு: பிரதமா், ராகுல் இரங்கல்

நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவராக இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4-ஆம் ஆகா கான், கரிம் அல்-ஹுசைனி செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உ... மேலும் பார்க்க