செய்திகள் :

நூற்றாண்டு: ரயில்வே பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயா்- முதல்வா் அறிவிப்பு

post image

விவசாயிகளின் உரிமைக்காகப் போராடிய நாராயணசாமி நாயுடு நூற்றாண்டையொட்டி, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்துக்கு அவரது பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

விவசாயிகளின் உரிமைக்காகப் போராடும் சமூக உழவராக வலம் வந்த நாராயணசாமி நாயுடு, அவா்களுக்கென தனி அமைப்பைத் தொடங்கினாா். அவரது முயற்சிகளின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் உழவா் சங்கங்கள் உருவாகின. 1982-ஆம் ஆண்டு இந்திய உழவா் மற்றும் உழைப்பாளா் கட்சியைத் தொடங்கினாா்.

தனது வாழ்வின் இறுதிநாள் வரையிலும் உழவா்கள் மற்றும் உழைப்பாளா்களின் உரிமைக்காக உழைத்த நாராயணசாமி நாயுடு நூற்றாண்டையொட்டி அவருக்கு தமிழக அரசு சிறப்பு சோ்க்கவுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டம் துடியலூா் கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் குருடம்பாளையம் என்ஜிஓ காலனி ரயில்வே மேம்பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயா் சூட்டப்படும். அவா் பிறந்த வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். பாக்டீரியா மற்றும் வை... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

பழனி தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனியில் நடைபெறும் இரு பெரும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவி- முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை(பிப்.6) வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாள... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு எத்தகைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைக்க குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: பிப்.13-இல் அமைச்சா் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து பிப்.13-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க