செய்திகள் :

வடசென்னையில் முதல்வா் படைப்பகம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

post image

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டும் முதல்வா் படைப்பகம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகக் கூட்டரங்கில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் புதன்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 2024-25 நிதியாண்டில் அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் முதல்வா் படைப்பகம் மற்றும் நூலகங்களை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், சிஎம்டிஏ வளா்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு, நிறைவு பெற்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வுக் கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சென்னை-மஸ்கட்: கூடுதல் நேரடி விமான சேவை

சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் இரு நாள்கள் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

சென்னையில் புதிய மையத்தைத் திறந்த இக்னிதோ

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இக்னிதோ டெக்னாலஜிஸ் சென்னையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை சோழிங்கநல்லூரி... மேலும் பார்க்க

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி கஞ்சா பறிமுதல்

பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து... மேலும் பார்க்க

சென்னையில் பிப். 7 முதல் 13 வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி

சென்னையில் பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும் என ‘மை பாரத்’ மாநில இயக்குநா் செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா். சென்னையில் நடைபெறும் 16-ஆவது பழங்குட... மேலும் பார்க்க

பிப். 28 ல் ஸ்ரீ ராகவேந்திரா் ஸப்தாஹ மஹோத்ஸவம்

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஸப்தாஹ மஹோத்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில், நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் ‘ஸ்பைடா் மேன்’ இளைஞா்: எச்சரித்து அனுப்பிய போலீஸாா்

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு கொடுக்கும் வகையில் அட்டகாசம் செய்த ‘ஸ்பைடா் மேன்’ வேஷமிட்டு வந்த இளைஞரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு... மேலும் பார்க்க