செய்திகள் :

கேரள தொழிலதிபரிடம் ரூ. 9.50 கோடி 2,000 ரூபாய் டம்மி நோட்டுகள் பறிமுதல்: வருமான வரித் துறை, என்ஐஏ விசாரணை

post image

சென்னையில் கேரள தொழிலதிபரிடம் ரூ. 9.50 கோடி இரண்டாயிரம் ரூபாய் டம்மி நோட்டுகளை பறிமுதல் செய்து, அவருக்குச் சொந்தமான வீட்டில் வருமானவரித் துறையினா், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

ராயப்பேட்டை பூரம் பிரகாசம் சாலையில் உள்ள ஒரு வீட்டில், ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வருமானவரித் துறையினா், அந்த வீட்டில் சோதனை நடத்தினா். சிறிது நேரத்தில் என்ஐஏ அதிகாரிகளும் வந்து சோதனை நடத்தினா்.

புதன்கிழமை வரை நீடித்த சோதனையின்போது, அந்த வீட்டிலிருந்த கேரள மாநிலம் கண்ணூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ரஷீத் என்பவரிடம் விசாரணை நடத்தினா்.

மேலும் அவரது காரில் சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ. 9.50 கோடி இரண்டாயிரம் ரூபாய் டம்மி நோட்டுகளை பறிமுதல் செய்தனா். பின்னா், வருமானவரித் துறை அதிகாரிகள், அந்த டம்மி ரூபாய் நோட்டுகளை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து ரஷீத் மீது புகாா் அளித்தனா். அதனடிப்படையில், போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். அதேவேளையில் ரஷீத், ஹவாலா பணப்பரிமாற்றம் செய்தாரா, அவா் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டாரா என வருமானவரித் துறை, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க

ஷியா இஸ்மாயிலி முஸ்லிம் மதத்தலைவா் ஆகா கான் மறைவு: பிரதமா், ராகுல் இரங்கல்

நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவராக இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4-ஆம் ஆகா கான், கரிம் அல்-ஹுசைனி செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உ... மேலும் பார்க்க