செய்திகள் :

'அயோத்தியில் கலவரத்தை முடிச்சிட்டு, திருப்பரங்குன்றத்தில ஆரம்பிச்சுருக்காங்க'- செல்வப்பெருந்தகை

post image
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்காக ஒரு கும்பல் வெளியில் இருந்து மக்களைக் கூட்டி வந்து உள்ளூர் மக்களுக்கு எதிராக இந்தப் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறது. இதனை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. நாளை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக எங்கள் தலைவர் பெருமக்களோடு திருப்பரங்குன்றம் ஆலய வழிபாடு செய்ய இருக்கிறோம். அதே சமயம் சிக்கந்தர் பாதுஷாவையும் வழிபட இருக்கிறோம்.  மத நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளோம்.

திருப்பரங்குன்றம்

தமிழ்நாடு அரசு இதுபோன்ற சம்பவங்களில் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி தமிழகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை கெடுப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் பாஜகவின் துணையோடு தமிழகத்தை கலவர பூமியாக்க நினைக்கிறார்கள். ஆன்மிகம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு.

அரசியலை ஆன்மீகத்தில் கலந்துவிடக்கூடாது. அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள் தற்போது  திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இவர்களது மத அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி அடைந்து வருகிறது.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,ஆக வேண்டும் என்று எல்லா குறுக்கு வழியும் கையாளுகிறார்கள்.  திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது. ஜனநாயகம்தான் எங்கள் கோட்பாடு, அதனை சீர் குலைக்க நினைப்பவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`கொஞ்சநாள் ஊர்ல போய் இருன்னு தலைவர் சொல்லிட்டார்' - வைகோவின் உதவியாளரை விசாரித்த கியூ பிரான்ச்

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இங்கு, வைகோவின் உதவியாளர் வீட்டுக்கு ... மேலும் பார்க்க

America: அமெரிக்க வெளியேற்றிய இந்தியர்கள்... அமிர்தசரஸில் தரையிறங்கிய சி17 விமானம்!

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை சி17 ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள வெளிநாட்டவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "பக்தர்கள் மேல கை வச்சா நீங்க இருக்க மாட்டிங்க..." - அண்ணாமலை பரபரப்புப் பேட்டி

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பரபரப்பு அடங்கி, இன்று முதல் பக்தர்கள் கோயில், தர்காவிற்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.இருப்பினும், சிறிது நாள்களுக்குச் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு கட்சி, அமை... மேலும் பார்க்க

``கிளாம்பாக்கத்தில் 18 வயது பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை..." - அண்ணாமலை கண்டனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிளம்பாக்கத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் பாலியல் ... மேலும் பார்க்க

Kumbh Mela: மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி... திரிவேனி சங்கமத்தில் புனித நீராடல்!

கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் ம... மேலும் பார்க்க

‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும்..!’ - லீக்கான சீக்ரெட் ரிப்போர்ட்; பிரிட்டன் அரசுக்கு அச்சுறுத்தலா?

‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’ என்ற மையத் தகவலுடன், பொதுவெளியில் லீக் ஆன பிரிட்டன் உள்துறை அலுவலக ... மேலும் பார்க்க