செய்திகள் :

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: கர்ப்பிணி எப்படியிருக்கிறார்?

post image

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

முதல்கட்டமாக, அவரது கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவருக்கு அறுவைசிகிச்சைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஸ்கேன் செய்யப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகள் வந்ததும் அடுத்தக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் கர்ப்பிணி என்பதால், அதற்கேற்ற வகையில் சிகிச்சைகள் மிகவும் கவனத்துடன் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி, திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது, இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இதனால் கத்திக் கூச்சலிட்ட கர்ப்பிணியின் கையை உடைத்து ஓடும் ரயிலிலிருந்து கே.வி. குப்பம் அருகே கீழே தள்ளியிருக்கிறார். ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிக்கு, தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாக இருந்துள்ளது. உயிருக்குப் போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு ரயில்வே காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் குற்றப்பின்னணி கொண்ட ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர், ரயிலில் கர்ப்பிணி என்றும் பாராமல், பாலியல் துன்புறுத்தல் செய்து ரயிலிலிருந்து தள்ளியிருக்கிறார்.

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை செய்து அறிக்கை அனுப்பும்படி சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநில... மேலும் பார்க்க

கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான்: பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!

வேலூர்: ரயிலில், மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு என்னிடம் அத்துமீறிய ஹேமராஜ், என் கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான் என்று ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட கர்ப்பி... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்ப... மேலும் பார்க்க

கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!

கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது. கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் அ... மேலும் பார்க்க

இந்துப்பு பயன்பாட்டை தவிா்க்க சுகாதாரத் துறை வலியுறுத்தல்

சந்தையில் பரவலாக விற்பனை செய்யப்படும் இந்துப்பு (ராக் சால்ட்) வகைகளில் போதிய அளவு அயோடின் கலக்கப்படுவதில்லை என்றும், உணவில் அதைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேலும் ஒரு தமிழக ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாறுதலாகியுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தத்துக்கு மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியு... மேலும் பார்க்க