செய்திகள் :

கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான்: பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!

post image

வேலூர்: ரயிலில், மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு என்னிடம் அத்துமீறிய ஹேமராஜ், என் கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான் என்று ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் கூறியிருக்கிறார்.

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில், குற்றப் பிண்ணனி கொண்ட ஹேமராஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிப் பெண் செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசுகையில், ஓடும் ரயிலில்

மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டான். நானும் அவனிடம் அரை மணி நேரமாக போராடினேன். கர்ப்பிணியாக இருப்பதால் விட்டுவிடுமாறு கொஞ்சினேன்.

பிறகு கத்திக் கூச்சலிட்டதால், என் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று, கையை உடைத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டான். ரயிலில் இருந்து விழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரே கையில் ரயிலைப் பிடித்துக் கொண்டு போராடினேன். ஆனால், என் கையை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டான். பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.

குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மகளிர் பெட்டியில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பது பலரையும் கலங்க வைப்பதாக உள்ளது.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி யார்?

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று (பிப்-6) தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது கர்ப்பிணி பெண், ரயிலில் கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த இளைஞர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது, அவர் கத்திக் கூச்சலிட்டதால், கர்ப்பிணியின் கையை உடைத்து ஓடும் ரயிலிலிருந்து கே.வி. குப்பம் அருகே கீழே தள்ளியிருக்கிறார்.

ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிக்கு, தலை, கை, கால்களில் எலும்பு முறிவுடன் உயிருக்குப் போராடியவரை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: கர்ப்பிணி எப்படியிருக்கிறார்?

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ... மேலும் பார்க்க

தமிழக பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநில... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்ப... மேலும் பார்க்க

கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!

கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது. கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் அ... மேலும் பார்க்க

இந்துப்பு பயன்பாட்டை தவிா்க்க சுகாதாரத் துறை வலியுறுத்தல்

சந்தையில் பரவலாக விற்பனை செய்யப்படும் இந்துப்பு (ராக் சால்ட்) வகைகளில் போதிய அளவு அயோடின் கலக்கப்படுவதில்லை என்றும், உணவில் அதைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேலும் ஒரு தமிழக ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாறுதலாகியுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தத்துக்கு மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியு... மேலும் பார்க்க