செய்திகள் :

வயநாட்டில் இறந்த கிடந்த 3 புலிகள்: வனத்துறை தீவிர விசாரணை

post image

வயநாடு: வயநாடு கூட்டமுண்டா எஸ்டேட் பகுதி மற்றும் மயக்கொல்லி வனப்பகுதியில் 3 புலிகள் இறந்ததை அடுத்து வனத்துறையின் 8 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கேரளம் மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கூட்டமுண்டா எஸ்டேட் பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புலியின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, பிற்பகல் 2 மணியளவில் குறிச்சியாட் வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இரண்டு பெரிய புலிகள் இறந்து கிடந்ததை கண்டனர். மூன்றாவது புலியின் சிதைந்த உடல் எச்சங்கள் வைத்திரி வனப் பிரிவின் கீழ் உள்ள ஒரு காபி தோட்டத்தில் கிடந்ததை கண்டனர். மூன்று புலிகளின் உடல்களையும் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், மூன்று புலிகளின் இறப்பு குறித்து ஒரு சிறப்புக் குழுவை அமைத்து முழுமையான விசாரணையை நடத்தி புலிகளின் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் உத்தரவிட்டார்.

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி அளிக்கிறது: இபிஎஸ்

இதனைத் தொடர்ந்து வடக்கு வட்ட வனத்துறை தலைமைப் பாதுகாவலர் கே.எஸ். தீபா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 3 புலிகள் இறப்புக்கு பின்னால் ஏதாவது சதித்திட்டம் உள்ளதா? அல்லது யாராவது இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து வயநாடு மலை மாவட்டத்திற்குள் இரண்டு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட மூன்று புலிகளின் இறப்பு குறித்து கேரள வனத்துறையின் சிறப்பு குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் காபி கொட்டை பறித்துக்கொண்டிருந்த பழங்குடியினப் பெண் ஒருவரை புலி தாக்கி உயிரிழந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெவ்வேறு இடங்களில் மூன்று புலிகள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் முன்னாள் கிராமத் தலைவர் வெட்டிக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் முன்னார் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ஒருவரை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். வியாழனன்று இரவு அரன்பூர்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் 3-வது முறையாக தீ விபத்து!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.செக்டார் 18-ல் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று க... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! வீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது!

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோ... மேலும் பார்க்க

தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் தில்லியில் மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கு மின்ன... மேலும் பார்க்க

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க