செய்திகள் :

மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது?

post image
திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள தனியார்ப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்தகுமார்.

நேற்று (பிப்ரவரி 6) பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமியிடம் வசந்தகுமார் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, அந்த சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பிப் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியதை அடுத்து, பள்ளிக்குச் சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசந்தகுமாரை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

சுதா, வசந்தகுமார்

இந்நிலையில், வசந்தகுமாரை போலீஸார் அழைத்துச் சென்றனர். மகளிர் காவல் ஆய்வாளர் வேறு அலுவலுக்காகச் சென்றிருந்த காரணத்தால் வழக்கை விசாரிக்கத் தாமதமானதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் அந்த தனியார்ப் பள்ளியின் வளாகத்தில் புகுந்து உள்ளே இருந்த கண்ணாடி கதவுகள், கார் மற்றும் பூச்செட்டிகளை அடித்து நொறுக்கிச் சூறையாடினர். மேலும், சிறுமியின் உறவினர்கள் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக 10 கிலோ மீட்டருக்கு தூரத்துக்குப் பாதித்தது.

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் திருச்சி சரக காவல்துறை தலைவர் வருண்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் இருந்த மக்களைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தி கும்பலைக் கலைத்து போக்குவரத்தைச் சரி செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினம் செய்தியாளர்களிடம், "பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேர் மீது புகார் வந்துள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினம்

அதில், சுதா, வசந்தகுமார், செழியன் உள்ளிட்ட நான்கு பேரைத் தற்போது கைது செய்திருக்கிறோம். பள்ளியின் முதல்வரையும் இரவுக்குள் கைது செய்து விடுவோம். மேலும், இதுவே இந்த பள்ளி மீது வரும் முதல் புகார். இது போல் மேலும் சிலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறும் நிலையில், அதற்கு உண்டான ஆவணங்களைப் புலன் விசாரணை செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று எஸ்.பி தெரிவித்தார்.

சிறுமி ஒருவருக்குப் பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், அந்த சிறுமியின் உறவினர்களை அதிர வைத்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``தையல் போட்டால் தழும்பு வரும்'' -காயத்தில் Fevi kwik போட்டு ஒட்டிய செவிலியர்... கர்நாடக அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆரம்ப சுகாதார மையம். இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி கன்னத்தில் ஆழமான காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட குருகிஷன் அன்னப்ப ஹோசாமணி என்ற 7 வயது சி... மேலும் பார்க்க

`காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..!’ - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்த காதலன்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரின் மூத்த மகன் வசந்த். ஐடிஐ படித்து வந்த நிலையில், கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலி... மேலும் பார்க்க

பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை இளைஞர்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் விமல்குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் விமல்குமாரின் நடவடிக... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறல்; கீழே தள்ளிவிட்ட நிர்வாண இளைஞன் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள மங்கள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகிலுள்ள கந்தம்பாளையம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.தனது கணவருடன் வ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன நடந்தது?

ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி 13 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். ... மேலும் பார்க்க

புதுச்சேரி டு விழுப்புரம்: `பைக் எப்படி ஓடுது?’ -பெட்ரோல் டேங்க்கில் மது கடத்தல்.. அதிர்ந்த போலீஸ்!

தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானங்களில் விலை குறைவு. அதனால் புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர், திண்டிவனம் போன்ற தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த குற்றப் பின்னணி கொண்ட சிலர், ப... மேலும் பார்க்க