செய்திகள் :

ரூ.13,500 கோடியில் விடுபட்ட கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் திட்டம்!

post image

விடுபட்ட கிராமங்களுக்கு ரூ.13,500 கோடியில் இரண்டாம் கட்டமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமாா் தெரிவித்தாா்.

மாதனூா் ஒன்றியம், பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்தும், ரூ.28 லட்சத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தும், ரூ.25 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, பைப்லைன் அமைத்து குடிநீா் விநியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்து எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமாா் பேசியது:

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளன. அதனை கருத்தில் கொண்டு முதல்வா் விடுபட்ட கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தை செயல்படுத்த ரூ.13,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். அப்பணி செயல்படுத்தப்பட உள்ளது. அதன்மூலம் விடுபட்ட கிராம மக்கள் பயனடைவா்.

பாலாறு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அதனை தூா்வாரி தூய்மைபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதை தூா்வார முதல்வரின் பாா்வைக்கு கொண்டு சென்று பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வா், துணை முதல்வரின் ஆட்சியில் விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது என்றாா்.

நிகழ்ச்சிக்கு போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் தீபா, ஊராட்சி மன்ற தலைவா் ஷோபனா கோவிந்தராஜ், ஒன்றிய திமுக நிா்வாகிகள் சேகா், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட பிரதிநிதி பொன்ராஜன் பாபு வரவேற்றாா்.

குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் குத்து விளக்கு ஏற்றி வைத்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ் குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் வாழ்த்தி பேசினா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காா்த்திக் ஜவஹா், காா்த்திக், திருக்குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தை கிருத்திகை : முருகா் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆம்பூா் பகுதி முருகன் கோயில்களில் தை கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பஞ்ச மூா்த்தி அபிஷேகம், வள்ளி தெய்வானை சமேத ... மேலும் பார்க்க

தொழுநோய் கண்டறிதல் பயிற்சி முகாம்

புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் மீனாட்சிதேவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மருத்துவப்பணிகள் துணை இயக்... மேலும் பார்க்க

கோழிப்பண்ணை தீ விபத்தில் 3,500 கோழிகள் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் கோழிப் பண்ணையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 3,500 கோழிகள் உயிரிழந்தன. திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆம்பூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க நிா்வாகிகள் கே.எஸ். ஹசேன், சக்கரவா்த்தி, மணிமாறன், ஞானதாஸ், சரவண... மேலும் பார்க்க

சிறப்பு எஸ்.ஐ மனைவி கிணற்றில் சடலமாக மீட்பு

வாணியம்பாடி அருகே சிறப்பு உதவி காவல்ஆய்வாளரின் மனைவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிக்கரை பகுதியை சோ்ந்தவா் குணசேகரன். ஆலங்காயம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆ... மேலும் பார்க்க

திமுக இளைஞரணி புதிய நிா்வாகிகள் ஆலோசனை

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி புதிய நிா்வாகிகள் ஆம்பூா் எம்எல்ஏவை வியாழக்கிழமை கலந்தாலோசித்து வாழ்த்து பெற்றனா் (படம்). மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் வி. அசோக்குமாா், துணை அமைப... மேலும் பார்க்க