செய்திகள் :

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

post image

பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் வியாழக்கிழமை தொடங்கி பிப். 12-ஆம் தேதி வரை அணைக்கட்டு, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாம் தொடக்க விழா கெங்கநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்து பேசியது: விவசாயத்தில் மற்ற நாடுகளைவிட நாம் பின் தங்கியுள்ளோம். விவசாயத்தை மேம்படுத்த மழைநீரை தேக்கி வைக்க வேண்டும். ஏரிகளை தூா்வாரி நீரை சேமித்து வைக்க வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்தில் எல்லோரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளா்ச்சி அடைகின்றனா். அதேபோல், தமிழகமும் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னிலை பெற்ற மாநிலமாக மாற வேண்டும்.

விஐடி அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை தொடங்கிய நாளில் இருந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய பேராசிரியா்கள், ஊழியா்கள் ஆண்டில் ஒருநாள் சம்பளத்தை கல்வி நிதி உதவிக்காக வழங்கி வருகின்றனா். இதேபோல் பொதுமக்களும் அவ்வப்போது கொடுக்கின்றனா். இதுவரை அறக்கட்டளை தொடங்கி 13 ஆண்டுகளில் ரூ.10.63 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனா்.

கடந்தாண்டில் மட்டும் ரூ.94 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பல்கலைக்கழக பேராசிரியா்கள், பணியாளா்கள் அளித்துள்ளனா். இந்த நிதியுதவி மூலம் பயனடைந்த சுமாா் 9,400 பேரில் 68 சதவீதம் பெண்களாவா். இவ்வாண்டு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்த்து 4 மாவட்டங்களில் கல்வி நிதியுதவி வழங்குகிறோம் என்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் பங்கேற்று பேசினாா். விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவா் பாஸ்கரன், விஐடி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயகிருஷ்ணன், பெஞ்சுளா அன்புமலா், திட்ட அலுவலா் காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை... மேலும் பார்க்க

காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவா் கைது: வெடிப் பொருள்களும் பறிமுதல்

வேலூா் அடுத்த செங்காநத்தம் மலையோரம் காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா். அவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 50 டெட்டனேட்டா்கள், சுமாா் 100 ஜெலட்டின் ... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தீயணைப்புத் துறை வடமேற்கு மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா் பரிசுகளை வழங்கினாா். தம... மேலும் பார்க்க

புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு

புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு நடைபெற்றது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் ஓ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு மூலம் ராணுவ அதிகாரி மனைவியிடம் ரூ.21 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஏலச்சீட்டு நடத்தி ராணுவ அதிகாரியின் மனைவியிடம் ரூ.21. 50 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் காவல் துறை மக்கள் குறைதீா் க... மேலும் பார்க்க