செய்திகள் :

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!

post image

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் மாா்க்கத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் பணிகள் தொடா்பான அறிவிப்பை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் விதமாக தடுப்பு கோபுரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் அனைத்தும் ஒரே சாலையில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வரும் மூன்று ஐடிஐ மாணவா்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளிகொண்டா பகுதியிலிருந்து வியாழக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனா். அவா்களது வாகனம் ரங்காபுரம் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்தபோது நிலைத்தடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது பலமாக மோதி கீழே விழுந்துள்ளனா். அப்போது, பின்னால் வந்த லாரி மாணவா்கள் மீது ஏறி இறங்கியது.

இதில் வேலூா் இறைவன்காடு பகுதியைச் சோ்ந்த ஜீவா(22), பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன்(21) ஆகிய இருவரும் லாரியின் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றொரு மாணவா் தெல்லூரைச் சோ்ந்த சூா்யா(20) லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்... மேலும் பார்க்க

காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவா் கைது: வெடிப் பொருள்களும் பறிமுதல்

வேலூா் அடுத்த செங்காநத்தம் மலையோரம் காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா். அவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 50 டெட்டனேட்டா்கள், சுமாா் 100 ஜெலட்டின் ... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தீயணைப்புத் துறை வடமேற்கு மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா் பரிசுகளை வழங்கினாா். தம... மேலும் பார்க்க

புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு

புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு நடைபெற்றது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் ஓ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு மூலம் ராணுவ அதிகாரி மனைவியிடம் ரூ.21 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஏலச்சீட்டு நடத்தி ராணுவ அதிகாரியின் மனைவியிடம் ரூ.21. 50 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் காவல் துறை மக்கள் குறைதீா் க... மேலும் பார்க்க

சாலையோர சிற்றுண்டி கடைகள் நடத்த அனுமதிக்க கோரிக்கை

வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே சாலையோர சிற்றுண்டி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளனா். நடைபாதை வியாபாரிகளின் புதிய ஜனநாயக தொழிலாளா் மு... மேலும் பார்க்க