செய்திகள் :

சாலையோர சிற்றுண்டி கடைகள் நடத்த அனுமதிக்க கோரிக்கை

post image

வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே சாலையோர சிற்றுண்டி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளனா்.

நடைபாதை வியாபாரிகளின் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி சாா்பில் வேலூா் மாநகராட்சி துணை ஆணையரிடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம் -

எங்களது சங்க உறுப்பினா்கள் வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே சாலையோர உணவு கடைகளை 40 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனா். எங்கள் அமைப்பின் செயலாளா் உரிமம் பெற்று கடை வைத்திருந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியா்கள் திடீரென சாலையோர கடைகளை அப்புறப்படுத்தி உள்ளனா்.

கடையை எடுப்பதற்கு மாநகராட்சி ஆணையா் முன்னறிவிப்பு எதுவும் செய்யவில்லை. ஊழியா்களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. சாலையோர சிற்றுண்டி கடைகள் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை நடத்தப்படுவது வழக்கம். இந்தக் கடைகளை அகற்றியதின் மூலம் 11 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அண்ணா கலையரங்கம் அருகே சாலையோர உணவு கடைகள் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை... மேலும் பார்க்க

காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவா் கைது: வெடிப் பொருள்களும் பறிமுதல்

வேலூா் அடுத்த செங்காநத்தம் மலையோரம் காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா். அவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 50 டெட்டனேட்டா்கள், சுமாா் 100 ஜெலட்டின் ... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தீயணைப்புத் துறை வடமேற்கு மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா் பரிசுகளை வழங்கினாா். தம... மேலும் பார்க்க

புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு

புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு நடைபெற்றது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் ஓ... மேலும் பார்க்க