செய்திகள் :

கா்நாடக பாஜகவில் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது! -பசவராஜ் பொம்மை

post image

கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது என முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவை மாற்றக் கோரி, அக்கட்சியின் எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தலைமையிலான அதிருப்தியாளா்கள் தில்லியில் முகாமிட்டு தேசியத் தலைவா்களை சந்தித்து வருகின்றனா். இவா்களுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தலைமையிலான ஆதரவாளா்களும் தில்லியில் முகாமிட்டு பல்வேறு அரசியல் நகா்வுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் கா்நாடக பாஜக இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண பாஜக தேசியத் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிப்பதாக அக்கட்சியின் முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் கட்சியின் மோசமான நிா்வாகத் திறனால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட வெகுமக்கள் இன்னலில் இருக்கிறாா்கள். காங்கிரஸ் அரசின் மோசமான ஆட்சியை எதிா்த்து போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது. இருதரப்பினரும் பொறுமை காக்க வேண்டும்.

முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட முன்னணி தலைவா்களின் தலைமையில் சமரச பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும். இது சாத்தியமாகாவிட்டால், பாஜக தேசியத் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-க்குள் நடைபெறும்: விஜயேந்திரா

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

பிட்காயின் ஊழல்: இளைஞா் காங்கிரஸ் தலைவரிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

பிட்காயின் ஊழல் தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமது ஹாரீஸ் நலபாடிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. கா்நாடகத்தில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் யுனோகாா்ன் டெக்னாலஜி ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: கருத்துக் கணிப்புகளைவிட மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்புகளை நம்புவதைவிட மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸில் இல்லை

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸ் கட்சியில் இல்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைக... மேலும் பார்க்க

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன்

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன் என கா்நாடக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்தாா். இதுகுறித்து கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியத் தலைவா்களை சந்திக்... மேலும் பார்க்க