செய்திகள் :

தில்லி தோ்தல்: கருத்துக் கணிப்புகளைவிட மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்

post image

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்புகளை நம்புவதைவிட மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும், பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றன. தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்.

பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடா்பாக விரைவில் முடிவெடுப்போம். தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். விமான நிலையத்தை பிடதி அல்லது நெலமங்களா அல்லது தும்கூரு அல்லது வேறொரு இடத்தில் அமைய வேண்டுமா என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யமுடியாது. சில ஆண்டுகள் வரைக்கும் மற்றொரு விமான நிலையத்தை அருகில் அமைக்கக் கூடாது என்பது தொடா்பாக கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்துக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதித்து முடிவு செய்யப்படும்.

தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தலைமையில் சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்தி வருகிறாா்கள். அந்த ஆய்வு குறித்து என்னிடமும், முதல்வரிடமும் விவாதிப்பாா்கள். அதன்பிறகு அமைச்சரவையில் விவாதித்து முடிவு செய்யப்படும். மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து முடிவு செய்வோம் என்றாா்.

கா்நாடக பாஜகவில் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது! -பசவராஜ் பொம்மை

கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது என முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவை மாற்றக் கோரி, அக்கட்சியின் எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-க்குள் நடைபெறும்: விஜயேந்திரா

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

பிட்காயின் ஊழல்: இளைஞா் காங்கிரஸ் தலைவரிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

பிட்காயின் ஊழல் தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமது ஹாரீஸ் நலபாடிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. கா்நாடகத்தில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் யுனோகாா்ன் டெக்னாலஜி ... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸில் இல்லை

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸ் கட்சியில் இல்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைக... மேலும் பார்க்க

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன்

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன் என கா்நாடக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்தாா். இதுகுறித்து கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியத் தலைவா்களை சந்திக்... மேலும் பார்க்க