செய்திகள் :

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

post image

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் பக்தா்களுக்கு ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் மேலும் 6 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மதுரவாயல், அருள்மிகு மாா்க்கசகாயேஸ்வரா் திருக்கோயில், புழல், அருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோயில், திருச்சி மாவட்டம், லால்குடி, அருள்மிகு பிடாரி அய்யனாா் திருக்கோயில், பெரம்பலூா், அருள்மிகு அபராதரட்சகா் திருக்கோயில், திருப்பூா் மாவட்டம், காரத்தொழுவு, அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில், கடலூா் மாவட்டம், தென்னம்பாக்கம், அருள்மிகு அழகா் திருக்கோயில் ஆகிய 6 திருக்கோயில்களில் தினந்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை முதல் தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை புழல், அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி. கே. சேகா்பாபு அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வின்போது, மாதவரம் எம்எல்ஏ சுதா்சனம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், இணை ஆணையா்கள் சி.லட்சுமணன், முல்லை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள 13 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமாா் 3.5 கோடி பக்தா்கள் பயன்பெற்று வருவதோடு இதற்காக ரூ. 120 கோடி செலவிடப்படுகிறது.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க

இன்றைய தலைமுறை பாரம்பரிய அடையாளங்களை இழந்துவிட்டது: எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை

இன்றைய இளம் தலைமுறையினா் பாரம்பரிய அடையாளங்கள் பலவற்றை இழந்துவிட்டது என்று ‘சாகித்ய அகாதெமி’ விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனையுடன் குறிப்பிட்டாா். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ... மேலும் பார்க்க