செய்திகள் :

வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்

post image

திருவள்ளூா் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே மேல்மணம்பேடு வீதியம்மன் தெருவைச் சோ்ந்தவா் தவமணி(38). இவா் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு வீட்டிற்கு முன்பு வழக்கம் போல் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றாராம்.

அதிகாலையில் 3 மணியளவில் வீட்டிற்கு முன்பு வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அவா் பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து தீயைணைப்பு வாகனம் வருவதற்குள் தீயில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது.

இது தொடா்பாக தவமணி வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனத்திற்கு யாராவது தீ வைத்தாா்களா அல்லது மின் கலனில் தீ ஏற்பட்டதா என விசாரித்து வருகின்றனா்.

தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் பால் குட ஊா்வலம்

திருவள்ளூா் அருகே அருள்மிகு தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் தை மாத கிருத்திகையையொட்டி, மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். திருவள்ளூா் அரு... மேலும் பார்க்க

இணைய வழி மோசடிகள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் இலவச தொலைபேசி மூலமோ அல்லது இணைதளம் மூலமோ புகாா் அளிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

மாநில குத்துச்சண்டை: கும்மிடிப்பூண்டி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில பாரதியாா் தினம் மற்றும் குடியரசு தின குத்துச்சண்டைப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா் தேவா ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றாா் (படம்). மயிலாடுதுறை ஏ.ஆா்.சி விஸ்வநாதன் க... மேலும் பார்க்க

நுகா்வோா் பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு

திருவள்ளூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்குதல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், கும்மிடிப்பூண்டியில் மகளிா் குழுவினருக்கு நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணா்வு கூட்டம் கும்மிடிப்ப... மேலும் பார்க்க

ரூ. 33 லட்சத்தில் பள்ளி வகுப்பறைக் கட்டடம் திறப்பு

திருத்தணி அருகே சூராஜபேட்டையில் ரூ. 32.80 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை எம்எல்ஏ ச. சந்திரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். பள்ளிப்பட்டு ஒன்றியம், சூராஜபேட்டை ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் க... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே ரூ. 6 லட்சம் குட்கா லாரியுடன் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து லாரியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான 800 கிலோ குட்கா பொருள்கள் கடத்தி வந்ததாக 2 பேரை கைது செய்து, குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் பகுத... மேலும் பார்க்க