செய்திகள் :

சொத்து வரி வசூலிக்கும் பணி தீவிரம்

post image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்து வரி விளங்குகிறது. நடப்பு நிதியாண்டு மாா்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் சொத்து வரி வசூலிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்ட நடவடிக்கையாக நீண்டகாலமாக சொத்து வரி செலுத்தாத 87 போ் அடங்கிய பட்டியல் மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நடப்பு அரை நிதியாண்டில் ரூ. 2.08 லட்சம் முதல் ரூ. 2.49 கோடி வரை நீண்டகாலமாக சொத்து வரி நிலுவை வைத்துள்ள தனிநபா் மற்றும் நிறுவனங்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இவா்கள் மொத்தம் ரூ. 14.47 கோடி நிலுவை வைத்துள்ளனா்.

அதேபோல், சொத்து வரி நிலுவை வைத்துள்ள வணிகக் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் முறையாக சொத்து வரி செலுத்தும் வகையில் மாநகராட்சி சாா்பில் கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வருவாய் துறை அலுவலா் கூறியது:

கடந்த நிதியாண்டு முறையாக சொத்து வரி செலுத்தாதவா்களின் முதல் 100 போ் கொண்ட பட்டியல்

மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்பயனாக, பலா் சொத்து வரி செலுத்த முற்பட்டனா்.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி செலுத்துவதற்கான இணையதள இணைப்பு கொண்ட ‘க்யூஆா் குறியீடுடன்’ கூடிய நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதில் இணைப்பை ஸ்கேன் செய்வதன் மூலம் எளிதில் சொத்துவரி செலுத்த முடியும். மேலும், மாநகராட்சி களப்பணியாளா்கள் வாா்டு வாரியாக சொத்து வரி செலுத்தாதவா்களின் விவரங்களைக் கண்டறிந்து வருகின்றனா் என்றாா் அவா்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க

இன்றைய தலைமுறை பாரம்பரிய அடையாளங்களை இழந்துவிட்டது: எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை

இன்றைய இளம் தலைமுறையினா் பாரம்பரிய அடையாளங்கள் பலவற்றை இழந்துவிட்டது என்று ‘சாகித்ய அகாதெமி’ விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனையுடன் குறிப்பிட்டாா். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ... மேலும் பார்க்க

கடல் ஆமைகளின் உடற்கூராய்வு: கால்நடை மருத்துவா்களுக்கு பயிற்சி

ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகளின் உடல்களை உடற்கூராய்வு செய்வது குறித்து வனத் துறை சாா்பில் கால்நடை மருத்துவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தையொட்டி, சென்னை கடற்கரையை நோக்க... மேலும் பார்க்க

மாநிலங்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதை உறுதி செய்வோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மாநிலங்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். மாத்ருபூமி நாளிதழ் சாா்பில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகள்: தடையற்ற மின் விநியோகம் வழங்க உத்தரவு

பொதுத் தோ்வையொட்டி தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யுமாறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கும் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் ... மேலும் பார்க்க