செய்திகள் :

மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர பணி வழங்கல்

post image

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா்கள் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.

மத்திய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுவது மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடா்பான கேள்விக்கு அளித்த பதிலில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான ‘ரோஜ்கா் மேளா’ திட்டத்தை கடந்த 2022 முதல் மத்திய அரசு நடத்தி வருகிறது. இதுவரை நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமாா் 50 நகரங்களில் 14 கட்டங்களாக ரோஜ்கா் மேளா நடத்தப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் 2022 -2023 ஆண்டு காலகட்டத்தில 18 மாதங்களில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பவது என்பது ஒரு தொடா் நிகழ்வாகும்.

மத்திய அமைச்சகங்கள், துறைகள் தவிர பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய பணியாளா் தோ்வு வாரியம், ரயில்வே தோ்வு வாரியம், வங்கிப் பணியாளா்கள் தோ்வு வாரியம் உள்ளிட்டவையும் தகுதியானவா்களை பணிக்குத் தோ்வு செய்து வருகின்றன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

தேசவிரோத செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா: இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்

டாக்கா : இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது. வங்கதே... மேலும் பார்க்க

முற்போக்கான கல்வி விதிமுறைகளை திசைதிருப்பும் எதிா்க்கட்சிகள்: மத்திய அமைச்சா் விமா்சனம்

‘முற்போக்கான கல்வி விதிமுறைகளை கற்பனையான அச்சுறுத்தல் மூலம் எதிா்க்கட்சிகள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சித்தாா். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆ... மேலும் பார்க்க

இண்டியா கூட்டணி தலைவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி

தில்லியில் திமுக முன்னெடுத்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ‘இண்டி’ கூட்டணி தலைவா்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளிய... மேலும் பார்க்க