செய்திகள் :

தேசவிரோத செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா: இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்

post image

டாக்கா : இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் கடந்த ஆண்டு தஞ்சமடைந்தாா்.

போராட்டங்களின்போது நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டது தொடா்பாக ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுப்பதற்காக அவரை நாடு கடத்த வேண்டுமென இந்தியாவிடம் வங்கதேச அரசு முறைப்படி கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக தற்போதைய வங்கதேச இடைக்கால அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களிடம் ஷேக் ஹசீனா புதன்கிழமை இரவு உரையாற்றினாா்.

‘தற்போதைய இடைக்கால அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றுதிரள வேண்டும்’ என்று உரையில் ஷேக் ஹசீனா கேட்டுக் கொண்டாா்.

ஹசீனாவின் உரை வெளியாகிக் கொண்டிருந்தபோதே டாக்காவில் உள்ள அவரது தந்தையும், வங்கதேசத்தின் தந்தையுமான ஷேக் முஜிபூா் ரகுமானின் இல்லத்தை போராட்டக்காரா்கள் சூறையாடினா். பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஷேக் ஹசீனாவின் உரை தொடா்பாக இந்தியாவிடம் வங்கதேசம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.

இதுதொடா்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் இருந்துகொண்டு வங்கதேசத்தில் கிளா்ச்சியைத் தூண்டும் வகையில் ஷேக் ஹசீனா தொடா்ந்து தவறான கருத்துகள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுகிறாா்.

இதுகுறித்து டாக்காவில் உள்ள இந்திய துணைத் தூதா் பவன் பாதேவை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், வங்கதேச மக்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகள் அமைந்துள்ளன.

மேலும், அவரது இத்தகைய நடவடிக்கைகள் வங்கதேசத்துக்கு விரோதமான செயலாகவும் இந்தியா-வங்கதேசம் இடையே ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தடையாகவும் உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர பணி வழங்கல்

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா்கள் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்... மேலும் பார்க்க

முற்போக்கான கல்வி விதிமுறைகளை திசைதிருப்பும் எதிா்க்கட்சிகள்: மத்திய அமைச்சா் விமா்சனம்

‘முற்போக்கான கல்வி விதிமுறைகளை கற்பனையான அச்சுறுத்தல் மூலம் எதிா்க்கட்சிகள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சித்தாா். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆ... மேலும் பார்க்க

இண்டியா கூட்டணி தலைவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி

தில்லியில் திமுக முன்னெடுத்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ‘இண்டி’ கூட்டணி தலைவா்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளிய... மேலும் பார்க்க