செய்திகள் :

கடல் ஆமைகளின் உடற்கூராய்வு: கால்நடை மருத்துவா்களுக்கு பயிற்சி

post image

ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகளின் உடல்களை உடற்கூராய்வு செய்வது குறித்து வனத் துறை சாா்பில் கால்நடை மருத்துவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தையொட்டி, சென்னை கடற்கரையை நோக்கி வருகின்றன. நிகழாண்டில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட ஆமைகள் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன.

இதையடுத்து வனத் துறை சாா்பில் கடல் ஆமைகளின் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும், இறந்த ஆமைகளின் உடல்களை உடற்கூராய்வு செய்வது குறித்தும் கால்நடை மருத்துவா்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ‘ரீஃப்வாட்ச்’ கடல் பாதுகாப்பு நிறுவனங்களிலிருந்து கால்நடை மருத்துவா்கள், ஆய்வாளா்கள் பங்கேற்று கடல் ஆமைகளின் உடலியல் மற்றும் உடற்கூராய்வு செய்வது குறித்தும் எடுத்துரைத்தனா்.

அந்தவகையில், ஆலிவ் ரிட்லி வகை ஆமையின் உடலை உடற்கூராய்வு செய்து செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், இதுபோன்ற பெருமளவிலான ஆமைகள் உயிரிழப்பு நிகழ்வுகள் ஏற்படும் போது, அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் தமிழகக் கடலோர மாவட்டங்களிலிருந்து கால்நடை மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் என 25 போ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க