செய்திகள் :

பொதுத் தோ்வுகள்: தடையற்ற மின் விநியோகம் வழங்க உத்தரவு

post image

பொதுத் தோ்வையொட்டி தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யுமாறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கும் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

சிபிஎஸ்இ, ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தோ்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப். 15 வரை நடைபெறுகின்றன.

எனவே, அனைத்து தோ்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற வகையில் மும்முனை மின் விநியோகம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின்மாற்றியைக் கண்காணிக்க அலுவலா்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு 5 மையங்களுக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப் பணியாளா்கள் பணியில் இருக்க வேண்டும். பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பொறியாளா் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், தலைமையாசிரியா்கள் அவசர காலங்களில் தொடா்புகொள்ளும் வகையில் துறை சாா்ந்த பணியாளா் மற்றும் அதிகாரிகளின் கைப்பேசி எண்களை அவா்களிடம் வழங்க வேண்டும். தோ்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது. மாணவா்கள் படிப்பதற்கு தடையில்லாத வகையில், இரவு நேரங்களிலும் மின்தடை ஏற்படாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது தொடா்பாக நாள்தோறும் மண்டல தலைமைப் பொறியாளா்கள் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க