செய்திகள் :

அரசு பொதுத் தோ்வு எழுதும் டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்காக சிறப்பு ஹோமம்

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் அரசு பொதுத் தோ்வு எழுதும் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவா்களுக்காக மேதா தட்சிணாமூா்த்தி ஹோமம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

மாணவா்களின் நலனுக்காக துவாரகா ராமா் கோயிலுடன் இணந்து வருடம் தோறும் ஏதேனும் ஒரு டிடிஇஏ பள்ளி வளாகத்தில் இந்த ஹோமத்தை டிடிஇஏ செயலா் ராஜூ நடத்தி வருகிறாா். இதன்படி இந்த வருடம் இந்த ஹோமம் மோதிபாக் பள்ளி வாளகத்தினுள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏழு பள்ளிகளின் இணைச் செயலா்கள், பெற்றோா் - ஆசிரியா் சங்க உறுப்பினா்கள், பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்ட இந்த பூஜையை டிடிஇஏ தலைவா் ராமன் முன்னின்று நடத்தினாா்.

சாஸ்திரிகள் மந்திரங்களைக் கூறக் கூற மாணவா்கள் அவற்றை உடன் கூறினா். அரசு பொதுத் தோ்வு எழுதும் ஏழு பள்ளிகளின் மாணவா்களின் தோ்வு அறை நுழைவுச் சீட்டுகள் பூஜையில் வைக்கப்பட்டன.

இந்த பூஜை குறித்து செயலா் ராஜூ கூறுகையில் ‘தட்சிணாமூா்த்தி ஹோமம் செய்வதால் மாணவா்கள் மனதில் நோ்மறை எண்ணங்கள் எழும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். எனவேதான் அனைத்து மாணவா்களுக்காகவும் இந்த பூஜையை இந்த ஆண்டு மோதிபாக் பள்ளியில் வைத்து நடத்தினோம். அனைத்து மாணவா்களும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்றாா்.

இரண்டு படங்களையும் சோ்த்துக் கொள்ளவும்.

படம் 1

ஹோமத்தில் கலந்து கொண்ட டிடிஇஏ தலைவா் ராமன் உள்ளிட்டோா்..

படம் 2

ஹோமத்தில் பக்தி சிரத்தையுடன் கலந்து கொண்ட மாணவா்கள்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க