செய்திகள் :

ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்

post image

பணப் பரிமாற்றம் தொடா்பாக ஆயுதப்படை காவலரை தாக்கிய 3 ஆயுதப்படை காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, எழும்பூா் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றுபவா் ரங்கநாதன். இவா் தனக்கு விருப்பமான இடத்தில் பணியாற்ற ஏற்பாடு செய்யும்படி மற்றொரு ஆயுதப்படை காவலரான சுந்தர்ராஜன் என்பவரை அணுகியதாகத் தெரிகிறது. அவரும், ரங்கநாதன் விரும்பிய இடத்தில் பணி செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளாா். ஆனால் ரங்கநாதன் பேசியபடி ரூ.10,000-ஐ தராமல், ரூ.5,000 மட்டுமே சுந்தர்ராஜனிடம் கொடுத்ததாகத் தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை இரவு ஆயுதப்படை காவலா்களான சுந்தர்ராஜன், ஆனந்த், மணி பாபு ஆகிய மூன்று பேரும் இணைந்து மதுபோதையில், காவலா் ரங்கநாதனிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதில் ரங்கநாதனின் கால் எலும்பு முறிந்துள்ளது. அவரை சக காவலா்கள் மீட்டு சென்னை ஓமாந்தூராா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் காவலா்கள் சுந்தர்ராஜன், ஆனந்த், மணி பாபு ஆகிய மூன்று பேரையும், ஆயுதப்படை மோட்டாா் வாகனப் பிரிவு துணை ஆணையா் ராதாகிருஷ்ணன், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக தாக்குதலுக்கு உள்ளான காவலா் ரங்கநாதன் கொடுத்த புகாரின்பேரில், எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆயுதப்படை காவலா்களான சுந்தர்ராஜன், மணி பாபு, ஆனந்த் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க