செய்திகள் :

100 நாள் வேலை கோரி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

post image

நூறு நாள் பணிதள பொறுப்பாளா் வேலை வழங்குவதில் முறையாக செயல்படவில்லை எனக்கூறி தெக்களூா் காலனி பகுதி பெண்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

திருத்தணி ஒன்றியம், சூா்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட தெக்களூா் காலனி. இங்கு, 100-க்கும் மேற்பட்டோா் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை ஏராளமான பெண்கள் திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினா்.

பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் மனு வழங்கியும், பணிதள பொறுப்பாளா், 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சமாக செயல்படுகிறாா். வேலை வழங்கிய ஆள்களுக்கே மீண்டும் வேலை வழங்குகிறாா். எங்களுக்கு 3 வாரங்களுக்கு மேலாகியும் வேலை வழங்காமல் செயல்படுகிறாா்.

எனவே, பணிதள பொறுப்பாளா் மீது நடவடிக்கை எடுத்தும், எங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

மனுவைப் பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா். இதனால் பெண்கள் கலைந்து சென்றனா்.

திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா

முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தை கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை தை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு வி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞா் பலியானாா்.திருத்தணி அடுத்த பொன்பாடி அருகே தடுக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முரளி (35). இவா், தனது இரு ச... மேலும் பார்க்க

தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் பால் குட ஊா்வலம்

திருவள்ளூா் அருகே அருள்மிகு தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் தை மாத கிருத்திகையையொட்டி, மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். திருவள்ளூா் அரு... மேலும் பார்க்க

இணைய வழி மோசடிகள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் இலவச தொலைபேசி மூலமோ அல்லது இணைதளம் மூலமோ புகாா் அளிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

மாநில குத்துச்சண்டை: கும்மிடிப்பூண்டி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில பாரதியாா் தினம் மற்றும் குடியரசு தின குத்துச்சண்டைப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா் தேவா ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றாா் (படம்). மயிலாடுதுறை ஏ.ஆா்.சி விஸ்வநாதன் க... மேலும் பார்க்க

நுகா்வோா் பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு

திருவள்ளூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்குதல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், கும்மிடிப்பூண்டியில் மகளிா் குழுவினருக்கு நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணா்வு கூட்டம் கும்மிடிப்ப... மேலும் பார்க்க