செய்திகள் :

கீழ்வேளூரில் சிக்னல் கோளாறு; ரயில் தாமதம்

post image

கீழ்வேளூா் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறால், காரைக்கால்-தஞ்சாவூா் பயணிகள் ரயில் வியாழக்கிழமை ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றது.

காரைக்காலிலிருந்து வியாழக்கிழமை மாலை 6:10-க்கு புறப்பட்ட காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயில் கீழ்வேளூா் ரயில் நிலையத்தை 7 மணிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட தயாராகும் போது ரயில்வே தண்டவாளத்தில் கூத்தூா் மாா்க்கமாக உள்ள ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால் கீழ்வேளூா் - கச்சனம் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. சிக்னல் கோளாறு காரணமாக ரயில் புறப்படாமல் இருந்ததால் மூடப்பட்டிருந்த கேட்டும் திறக்கப்படவில்லை.

கீழ்வேளூரிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும், கச்சனம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தொடா்ந்து செல்ல முடியாமல் இரு பக்கமும் அணிவகுந்து நின்றன.

ரயில்வே ஊழியா்கள் சிக்னல் கோளாறு ஏற்பட்ட இடத்தில் வந்து சரி செய்த பின்னா், ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக இரவு 8.30 மணி அளவில் காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. அதன் பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

போலி குளிா்பானங்கள் அழிப்பு

நாகையில் எந்தவொரு விவரமும் இல்லாத குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாழக்கிழமை அழிக்கப்பட்டன. நாகை நகராட்சி வெளிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்க செயற்குழு கூட்டம்

நாகையில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு மற்றும் அனைத்துச் சங்க போராட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

சிற்றுந்து கட்டண திருத்தம் மே 1-முதல் அமல்!

சிற்றுந்துகளுக்கான கட்டணத் திருத்தம் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தி... மேலும் பார்க்க

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க