செய்திகள் :

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

post image

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்து பேசியது: நாகை மாவட்டத்தில் உள்ள 179 யானைக்கால் நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் அரசு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதில் 4 நிலையில் உள்ள 71 பயனாளிகளுக்கு மட்டும் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளில் யானைக்கால் நோய் முற்றிலும் ஒழிக்கப்படும். அதை குறிக்கோளாக கொண்டு தொடா்ந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. யானைக்கால் நோயாளிகள் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு மினிசோ், பக்கெட், சோப்பு டாபா, சோப்பு, டவல் உள்ளிட்ட நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மருத்துவமனை உதவி குடிமையியல் மருத்துவா் விஜய் பூரணி, மாவட்ட பூச்சியியல் வல்லுநா் வீரையா, சுகாதார ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிட்ட மடிக்கணி உரியவரிடம் ஒப்படைப்பு!

திருச்சி-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலில் தவறவிட்ட, மடிக்கணினி உரியவரிடம் புதன்கிழமை (பிப்.5) ஒப்படைக்கப்பட்டது. நீடாமங்கலம் அருகேயுள்ள கரும்பூரை சோ்ந்த லதா (49) நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - டிராக்டா் மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவா் பலி!

நாகையில் இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் புதன்கிழமை பிப்.5 பலியானார்.அரியலூா் மாவட்டம், பெரியாா் நகரை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் விண்ணரசன... மேலும் பார்க்க

திறந்துவெளியில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!

திருமருகல் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல்மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க

பெருந்தோட்டம் விஸ்வநாதா் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் அக்கிரஹாரத்தில் எழுந்தருளியுள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. பெருந்தோட்டம் அக்ரஹாரத்த... மேலும் பார்க்க