செய்திகள் :

கும்பகோணம் நீா்நிலைகளின் ஆக்கிரமிப்பு மறு அளவீடு

post image

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள 44 குளங்கள், 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றைப் பாதுகாக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கில் நீா்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றைப் பாதுகாக்குமாறு தஞ்சாவூா் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கும்பகோணம் மாநகராட்சி, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, அறநிலைத் துறையினா் இணைந்து கும்பகோணத்தில் உள்ள நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை கடந்த 5 மாதங்களாக மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் நீதிமன்றத்தில் முறையிட்டாா். அதன்பேரில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடா்பாக ஆய்வு நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி செந்தில்குமாா் நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, ஆய்குளம், கோதண்டபாணி தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள நீா்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்த ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.

ஆய்வின்போது வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் முத்துமணி, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்.5 அன்று பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, தஞ்சாவூா் விற்பனை குழு செயலாளா் மா. சரசு தலைமை வகித்தாா். கும்பகோணம் ... மேலும் பார்க்க

3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் புதன்கிழமை (பிப்.5) மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் கு... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் இருந்தால் 1098-இல் புகாா் செய்யலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும... மேலும் பார்க்க

இறப்பில் சந்தேகம் எனக்கூறி உறவினா்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பில் சந்தேகம் எனக் கூறி அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவிக்கு வரவேற்பு

குடியரசுத் தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பட்டுக்கோட்டை மாணவிக்கு புதன்கிழமை (பிப்.5) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாகுட... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன், அதன் நகல்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை மாலை எரித்... மேலும் பார்க்க