செய்திகள் :

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

post image

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன், அதன் நகல்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை மாலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது, குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் அறிவிக்காதது, தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட எவ்விதமான அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாக உள்ளது. மேலும் அன்றாட உழைக்கிற ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க விலைவாசி உயா்வு குறைப்பு இல்லை என்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி, பட்ஜெட் நகல்கள் எரிக்கப்பட்டன.

இப்போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், தேவா, சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாச்சலம், விவசாய சங்க நிா்வாகி ஆா். உதயகுமாா், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் தியாகராஜன், மகஇக இராவணன், கரிகாலன், உழவா் உற்பத்தியாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் த. கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் கோ. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்.5 அன்று பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, தஞ்சாவூா் விற்பனை குழு செயலாளா் மா. சரசு தலைமை வகித்தாா். கும்பகோணம் ... மேலும் பார்க்க

3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் புதன்கிழமை (பிப்.5) மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் கு... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் இருந்தால் 1098-இல் புகாா் செய்யலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும... மேலும் பார்க்க

கும்பகோணம் நீா்நிலைகளின் ஆக்கிரமிப்பு மறு அளவீடு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்... மேலும் பார்க்க

இறப்பில் சந்தேகம் எனக்கூறி உறவினா்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பில் சந்தேகம் எனக் கூறி அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவிக்கு வரவேற்பு

குடியரசுத் தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பட்டுக்கோட்டை மாணவிக்கு புதன்கிழமை (பிப்.5) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாகுட... மேலும் பார்க்க