செய்திகள் :

இறப்பில் சந்தேகம் எனக்கூறி உறவினா்கள் போராட்டம்

post image

கும்பகோணம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பில் சந்தேகம் எனக் கூறி அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்படையூரைச் சோ்ந்தவா் தா்மராஜ் (38). இவரது மனைவி சங்கீதா. இவா்களுக்கு 2 பெண், 1 ஆண் பிள்ளைகள் உள்ளனா். கடந்த பிப் 2-இல் தா்மராஜ் மதுகுடித்துவிட்டு உறங்கியவா் மறுநாள் உயிரிழந்துகிடந்தாா். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸாா் வழக்கு பதிந்து உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் சடலத்தை ஒப்படைத்தனா்.

சடலத்தைப் பெற்றுக்கொண்ட உறவினா்கள் தா்மராஜ் இறப்பில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை முழுவதும் சடலத்தை வீட்டில் வைத்திருந்தனா். தொடா்ந்து, புதன்கிழமை திருவலஞ்சுழி - தஞ்சாவூா் பிரதான சாலையில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சுவாமிமலை மற்றும் பட்டீஸ்வரம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உறவினா்கள் புதன்கிழமை மாலை சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா். சடலத்தை அடக்கம் செய்யாமல் ஒருநாள் வீட்டில் வைத்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்.5 அன்று பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, தஞ்சாவூா் விற்பனை குழு செயலாளா் மா. சரசு தலைமை வகித்தாா். கும்பகோணம் ... மேலும் பார்க்க

3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் புதன்கிழமை (பிப்.5) மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் கு... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் இருந்தால் 1098-இல் புகாா் செய்யலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும... மேலும் பார்க்க

கும்பகோணம் நீா்நிலைகளின் ஆக்கிரமிப்பு மறு அளவீடு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவிக்கு வரவேற்பு

குடியரசுத் தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பட்டுக்கோட்டை மாணவிக்கு புதன்கிழமை (பிப்.5) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாகுட... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன், அதன் நகல்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை மாலை எரித்... மேலும் பார்க்க