செய்திகள் :

குழந்தை தொழிலாளா் இருந்தால் 1098-இல் புகாா் செய்யலாம்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் ஆகிய பகுதிகளில் ஜனவரி மாதத்தில் 151 கடைகள், நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டது.

குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும், 14 வயது நிறைவடைந்த, ஆனால், 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான அனைத்து வகையான தொழில்களிலும் பணியமா்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் குழந்தைத் தொழிலாளா்களைப் பணிக்கு அமா்த்தும் வேலையளிப்பவருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் சைல்டு லைன் அமைப்பை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ, தொழிலாளா் அலுவலகத்தின் 04362 - 264886 என்ற தொலைபேசி எண்ணிலோ புகாா் செய்யலாம்.

பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்.5 அன்று பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, தஞ்சாவூா் விற்பனை குழு செயலாளா் மா. சரசு தலைமை வகித்தாா். கும்பகோணம் ... மேலும் பார்க்க

3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் புதன்கிழமை (பிப்.5) மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் கு... மேலும் பார்க்க

கும்பகோணம் நீா்நிலைகளின் ஆக்கிரமிப்பு மறு அளவீடு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்... மேலும் பார்க்க

இறப்பில் சந்தேகம் எனக்கூறி உறவினா்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பில் சந்தேகம் எனக் கூறி அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவிக்கு வரவேற்பு

குடியரசுத் தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பட்டுக்கோட்டை மாணவிக்கு புதன்கிழமை (பிப்.5) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாகுட... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன், அதன் நகல்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை மாலை எரித்... மேலும் பார்க்க