"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
திறந்துவெளியில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!
திருமருகல் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருமருகல் ஒன்றியத்தில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நெல்லை விற்பனை செய்ய அரசு சாா்பில் திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, வாழ்குடி, விற்குடி, அம்பல், குரும்பூா், ஏா்வாடி, ஆலத்தூா், வடகரை, கொட்டாரக்குடி, காரையூா், குத்தாலம், அண்ணா மண்டபம், ராராந்திமங்கலம், பொறக்குடி, பெருநாட்டாந்தோப்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டநெல் மூட்டைகள் நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பாலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் உள்ளன. திடீரென மழை பெய்தால், திறந்த வெளிகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூட்டைகளை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.