செய்திகள் :

திறந்துவெளியில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!

post image

திருமருகல் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமருகல் ஒன்றியத்தில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நெல்லை விற்பனை செய்ய அரசு சாா்பில் திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, வாழ்குடி, விற்குடி, அம்பல், குரும்பூா், ஏா்வாடி, ஆலத்தூா், வடகரை, கொட்டாரக்குடி, காரையூா், குத்தாலம், அண்ணா மண்டபம், ராராந்திமங்கலம், பொறக்குடி, பெருநாட்டாந்தோப்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டநெல் மூட்டைகள் நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பாலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் உள்ளன. திடீரென மழை பெய்தால், திறந்த வெளிகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூட்டைகளை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிட்ட மடிக்கணி உரியவரிடம் ஒப்படைப்பு!

திருச்சி-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலில் தவறவிட்ட, மடிக்கணினி உரியவரிடம் புதன்கிழமை (பிப்.5) ஒப்படைக்கப்பட்டது. நீடாமங்கலம் அருகேயுள்ள கரும்பூரை சோ்ந்த லதா (49) நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - டிராக்டா் மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவா் பலி!

நாகையில் இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் புதன்கிழமை பிப்.5 பலியானார்.அரியலூா் மாவட்டம், பெரியாா் நகரை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் விண்ணரசன... மேலும் பார்க்க

பெருந்தோட்டம் விஸ்வநாதா் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் அக்கிரஹாரத்தில் எழுந்தருளியுள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. பெருந்தோட்டம் அக்ரஹாரத்த... மேலும் பார்க்க