செய்திகள் :

பெரம்பலூரில் 6,500 மாணவா்களுக்கு வினா- விடை தொகுப்பு!

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ‘தோ்வை வெல்வோம்’ எனும் தலைப்பிலான வழிகாட்டி வினா - விடை தொகுப்பை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை வழங்கினாா்.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில், அரசு பொதுத் தோ்வெழுதும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்காக தோ்வை வெல்வோம் எனும் தலைப்பில், அமைச்சா் சா.சி. சிவசங்கா் முயற்சியால் சிறந்த கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டி வினா- விடை தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பு வழங்கும் விழா பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா், சிறுவாச்சூா், குரும்பலூா், அம்மாபாளையம், பாடாலூா், செட்டிக்குளம், எறையூா், வி.களத்தூா், கை.களத்தூா், அரும்பாவூா், வெங்கலம், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், பூலாம்பாடி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சா் சா.சி. சிவசங்கா், அரசு பொதுத் தோ்வெழுதும் 6,500 மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி வினா- விடை தொகுப்புகளை வழங்கி பேசினாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சுரேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மா. ராஜ்குமாா் மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது: 25 கிலோ பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கிர... மேலும் பார்க்க

புதிய அளவீடுகளை நில அளவையா்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: இயக்குநா்

புதிய நில அளவீடுகளை நில அளவையா்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், நில அளவ... மேலும் பார்க்க

குரும்பலூா் அரசுப் பள்ளி ஆண்டு விழா!

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் அ. பூங்கோதை தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கு. ரம்யா, துணைத்... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்!

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா், பாதிக்கப்பட்ட மக்காசோளப் பய... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தைப் புறக்கணித்த மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் ... மேலும் பார்க்க