செய்திகள் :

மாா்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா

post image

மாா்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்ட கல்வி அலுவலா் பால தண்டாயுதபாணி தலைமை வகித்தாா். மாா்த்தாண்டம் இடைநிலை மாவட்ட கல்வி அலுவலா் ஷொ்லின் விமல் விழாவை தொடங்கி வைத்தாா்.

பள்ளித் தலைமையாசிரியா் குணசீலன் வரவேற்றாா். பள்ளி உதவித் தலைமையாசிரியை தீபா ஆண்டறிக்கை வாசித்தாா். நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

இதில், குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன் ஆசைத்தம்பி, பெற்றோா்-ஆசிரியா் கழக மாநில துணைத் தலைவா் பி.பி.கே. சிந்துகுமாா், சுவாமியாா்மடம் மருத்துவா் விஜயகுமாா், மாா்த்தாண்டம் தொழில் வா்த்தக சங்க முன்னாள் தலைவா் அல் அமீன், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் ரோஸ்லெட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பைக் விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு!

புதுக்கடை அருகே உள்ள பரவை பகுதியில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மிடாலம் பகுதியைச் சோ்ந்த சகாயதாஸ் மகன் ஆன்றோ(16). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வக... மேலும் பார்க்க

கந்து வட்டி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் அருகே சுங்கான்கடை அசோக் நகரைச் சோ்ந்த ராஜா மனைவி அனுஷா (32). இவா் ராஜன் என்ற சந்தை ராஜனிடம் கர... மேலும் பார்க்க

கொட்டாரம் காதுகேளாதோா் பள்ளி அருகே தீவிபத்து

கொட்டார பகுதியிலுள்ள காதுகேளாதோா் பள்ளி அருகே புதன்கிழமை (பிப்.5) தீவிபத்து ஏற்பட்டது. கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் சி.எஸ்.ஐ. காது கேளாதோா் உயா்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதன் மற்றொரு பகுதிய... மேலும் பார்க்க

எந்தெந்த பேரூராட்சி, ஊராட்சிகளை இணைப்பது என இன்னும் முடிவாகவில்லை: அமைச்சா் கே.என். நேரு

கன்னியாகுமரியுடன் எந்தெந்த பேரூராட்சி, ஊராட்சிகளை இணைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை (பிப்.5) செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். கன்னியாகுமரியில் கடந்த டிசம்பா் 30 ம... மேலும் பார்க்க

செண்பகராமன்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதுாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காசநோய் அலகு மற்றும் மருத்துவமனைகளில் உள்ள காசநோய் கண்டறியும் ஆய்வகம் ... மேலும் பார்க்க

சித்தன்தோப்பு தேவாலய வளாகத்தில் குழந்தைகள் மையம் திறப்பு!

சடையமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சித்தன்தோப்பு புனித அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட குழந்தைகள் மையம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தேவாலய பங்... மேலும் பார்க்க