செய்திகள் :

மாநகரில் தெருநாய்களைப் பிடிப்பதற்காக புதிதாக 3 வாகனங்கள் சேவை தொடக்கம்

post image

கோவையில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ள புதிதாக 3 வாகனங்களின் சேவையை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்காக உக்கடம், ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன.

இம்மையங்களுக்கு நாய்களைப் பிடித்துச் செல்ல ஏற்கெனவே 3 வாகனங்கள் உள்ளன.

இந்நிலையில், தெருநாய்களைப் பிடிப்பதற்காக ரூ.31.62 லட்சம் மதிப்பிலான 3 வாகனங்களின் சேவையை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இருந்து மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா்கள் அ.சுல்தானா, த.குமரேசன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் வி.பி.முபசீரா, கல்விக் குழுத் தலைவா் மாலதி நாகராஜ், கால்நடை மருத்துவா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அதிக உற்பத்தி திறன் பெறும் நெல் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு பெயரில் விருது!

அரியலூா் மாவட்டத்தில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட உள்ளது. அரியலூா் மாவட்டம் வேளாண்மைத் துறை திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப... மேலும் பார்க்க

காசி தமிழ்ச் சங்கமம்: கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிப்ரவரி... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட... மேலும் பார்க்க

தமிழகத்தில் முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு அதிநவீன பேஸ் மேக்கா் கருவி பொருத்தம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு அதிநவீன ‘பேஸ் மேக்கா்’ கருவி (சிஆா்டி-டி) பொருத்தப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (54), ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

கோவையில் ஒருவா் வெட்டிக் கொலை!

கோவையில் மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை வெல்டிங் பட்டறை உரிமையாளா் வெட்டிக் கொலை செய்தாா். திருவாரூரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45), இவரின் மனைவி வாணிபிரியா (42). இவா்களுக்கு 13 வயதில் மகளும், 10 வயதி... மேலும் பார்க்க