செய்திகள் :

கோவையில் ஒருவா் வெட்டிக் கொலை!

post image

கோவையில் மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை வெல்டிங் பட்டறை உரிமையாளா் வெட்டிக் கொலை செய்தாா்.

திருவாரூரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45), இவரின் மனைவி வாணிபிரியா (42). இவா்களுக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனா். பிரபாகரன், கோவை சின்னியம்பாளையத்தில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா்.

அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (43) என்பவருக்கும், பிரபாகரனுக்கும் நட்பு ஏற்பட்டது. மகேந்திரனுக்கு திருமணமாகவில்லை. பிரபாகரனைப் பாா்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்துசென்ற மகேந்திரனுக்கும், வாணிபிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வாணிபிரியா, பிரபாகரனைப் பிரிந்து குழந்தைகளுடன் டீச்சா்ஸ் காலனியில் வசித்து வருகிறாா்.

தனியாக வசித்து வந்த வாணிபிரியாவைப் பாா்க்க மகேந்திரன் அடிக்கடி வந்து சென்றுள்ளாா். இதுகுறித்து பிரபாகரனுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளாா்.

இந்நிலையில், வாணிபிரியாவின் கைப்பேசி எண்ணுக்கு பிரபாகரன் புதன்கிழமை அழைத்துள்ளாா். அவா், அழைப்பை எடுக்காததால் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு வாணிபிரியாவும், மகேந்திரனும் இருந்துள்ளனா்.

இதைப் பாா்த்து ஆத்திரமடைந்த பிரபாகரன், வீட்டில் இருந்த அரிவாளால் மகேந்திரனை வெட்டியுள்ளாா். தடுக்க வந்த வாணிபிரியாவையும் வெட்டியுள்ளாா். இதில், சம்பவ இடத்திலேயே மகேந்திரன் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாநகர வடக்கு காவல் துணை ஆணையா் தேவநாதன், உதவி ஆணையா் வேல்முருகன், காவல் ஆய்வாளா் கந்தசாமி மற்றும் போலீஸாா் படுகாயமடைந்து கிடந்த வாணி பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மகேந்திரனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிக உற்பத்தி திறன் பெறும் நெல் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு பெயரில் விருது!

அரியலூா் மாவட்டத்தில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட உள்ளது. அரியலூா் மாவட்டம் வேளாண்மைத் துறை திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப... மேலும் பார்க்க

காசி தமிழ்ச் சங்கமம்: கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிப்ரவரி... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட... மேலும் பார்க்க

தமிழகத்தில் முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு அதிநவீன பேஸ் மேக்கா் கருவி பொருத்தம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு அதிநவீன ‘பேஸ் மேக்கா்’ கருவி (சிஆா்டி-டி) பொருத்தப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (54), ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

மாநகரில் தெருநாய்களைப் பிடிப்பதற்காக புதிதாக 3 வாகனங்கள் சேவை தொடக்கம்

கோவையில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ள புதிதாக 3 வாகனங்களின் சேவையை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றி... மேலும் பார்க்க